தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா பல்லவியாக வந்து பாடுவது போல நினைத்துப் பார்த்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது எல்லா ஏற்பாடுகளும் செய்து கார்த்திக் உட்பட எல்லாரும் பல்லவிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் தீபா நைசாக வெளியே சென்று பர்தா அணிந்து தனது முகத்தை மறைத்துக் கொண்டு பல்லவியாக வந்து பாடுகிறாள். 


கார்த்திக், குரலைக் கேட்டதும் இவங்க தான் உண்மையான பல்லவி என்று சந்தோஷப்படுகிறான். ரெக்கார்டிங் நடந்து முடிய கார்த்திக் “நல்லவேளை நீங்க சொன்ன மாதிரி வந்து பாடி கொடுத்துடீங்க. இதனால் எல்லா வேலைகளையும் இன்னைக்கே முடித்து சொன்ன மாதிரி பாட்டை நல்ல விதமாக ரிலீஸ் செய்ய முடியும்” என்று நன்றி சொல்கிறான். 


பிறகு தீபா வெளியே வந்து மீண்டும் தனது கெட்டப்பை மாற்றிக் கொண்டு ஆபிஸ் உள்ளே செல்ல, கார்த்திக் “தீபா இவ்வளவு நேரம் எங்க போயிட்டிங்க” என்று கேட்க, தீபா ஒருவழியாக எதையோ சொல்லி சமாளித்து விடுகிறாள்.


இங்கு ரெக்கார்டிங் நடந்த விஷயம் தெரியாமல் சிதம்பரமும் அபிராமியும் “இனி அந்த பல்லவி பாடவே முடியாது” என சாதித்து விட்டது போல பேசி சந்தோசப்படுகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: Ethirneechal : மனம் மாறிய கதிர்... குணசேகரனை குழப்பிய ஈஸ்வரி... சென்டிமெண்டாக பேசும் கரிகாலன்... எதிர்நீச்சலில் இன்று


Dunki Review : ஹாட்ரிக் வெற்றி அடித்தாரா ஷாருக்கான்..? டங்கி படம் திரைவிமர்சனம்