தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’. இந்த சீரியலில் கடந்த வாரம் அமுதா மாயாவின் கணவர் சார்லஸை தேடி சென்ற நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது மதுரைக்கு வந்த அமுதா சார்லஸ் என்று தெரியாமலேயே அவருடன் ஆட்டோவில் மதுரை முழுவதும் தேடிப் பார்க்கிறாள். மறுபக்கம் மாயாவுக்கும் செந்திலுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மாயாவின் ஆட்கள் சார்லஸைக் கடத்தி விடுகின்றனர். 


அதன் பிறகு அமுதாவுக்கு ஆட்டோ ட்ரைவர் தான் சார்லஸ், அவரை கடத்தியது மாயாவின் ஆட்கள் தான் என்ற விஷயங்கள் தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து சார்லஸை எப்படியாவது கண்டுபிடித்தாக வேண்டும் என்ற முயற்சியில் இறங்குகிறாள். 


மறுபக்கம் இந்தக் கல்யாணத்தை நிறுத்த எந்த வழியும் கிடைக்கவில்லை என்றால் மாயாவை கொன்று விடுவது தான் ஒரே வழி என முடிவெடுக்கிறாள் அன்னம். அதே போல் மாணிக்கம் ரவுடிகளை ஏற்பாடு செய்து மாயாவை கொல்ல திட்டம் போடுகிறாள்.


இங்கே அமுதா CCTV காட்சிகளை வைத்து சார்லஸை கண்டு பிடிக்கலாம் என முடிவுக்கு வருகிறாள். இப்படியான நிலையில் இன்றைய அமுதாவும் அன்னலட்சுமியும் எபிசோட் நிறைவடைகிறது.