தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். iஇந்த சீரியல் தற்போது பரபரப்பான கதை களத்துடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த சீதாவின் அப்பா ராஜசேகர் தூக்கமின்றி குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என உறுதியாக இருக்க அர்ச்சனாவுக்கு பயம் உண்டானது. இதனை தொடர்ந்து இந்த சீரியலில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது விடிந்ததும் ராஜசேகர் இன்ஸ்பெக்டரை அழைத்து அந்த பகுதியில் ஆட்கள் கடத்தல், கொள்ளை போன்ற கேஸ்களில் பதிவாகியுள்ள ரவுடிகளின் லிஸ்டை எடுத்து வர சொல்ல அவரும் அதை வீட்டிற்கு கொண்டு வந்து கொடுக்கிறார். 


ராஜசேகர் சீதாவை கூப்பிட்டு உன்னை கடத்தினவன் யார் என்பது உனக்கு தெரியுமா? உன்னால அடையாளம் காட்ட முடியுமா? என்று கேட்க சீதா கண்டிப்பாக முடியும் என்று சொல்கிறாள். பிறகு இவர் ஒவ்வொரு ரவுடிகளின் போட்டோவையும் காட்ட அதற்குள் மகா ஏற்பாடு செய்த ரவுடியின் போட்டோவும் இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைகிறாள். 


இதில் இருந்து தப்பிக்க முடிவெடுத்து எல்லாருக்கும் நானே காபி போட்டு கொண்டு வரேன் என அர்ச்சனாவை  கிச்சன் அழைத்து சென்று கொதிக்கும் பாலில்  அர்ச்சனாவின் கையை எடுத்து போட்டு கத்த வைக்கிறாள். எல்லாரும் சத்தம் கேட்டு பதறி ஓடி வர அனைவரது கவனத்தையும் திசை திருப்பி மகா சம்மந்தப்பட்ட ரவுடியின் போட்டோவை மட்டும் எடுத்து விடுகிறாள். 


அடுத்து சுபாஷ்க்கு மட்டும் இவை அனைத்தையும் செய்தது மகா தான் என்ற விஷயம் தெரிய வருகிறது. அடுத்ததாக என்ன நடக்கப் போகின்றது என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். 


மேலும் படிக்க


TN Rain Alert: இன்றும் நாளையும் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. தொடரும் கனமழை.. வானிலை சொல்வது என்ன?


‘NIA-விற்கு பதில் ATS - தீவிரவாத தடுப்பிற்கு தனி பிரிவு’ அதிரடியாக உருவாக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!


எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இதுதான்: பி.சுசீலா முன்னிலையில் மேடையிலேயே பாடிய முதல்வர் ஸ்டாலின்!