தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த தொடரில் ராதிகா என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை நந்திதா ஜெனிஃப்பர் நடித்து வந்தார். பிரபல நடனக் கலைஞர் சின்னாவின் மகளான ஜெனிஃப்பர், சீரியலில் நடிப்பதற்கு முன்பு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 


இவர், ஒளிப்பதிவாளர் காசி விஸ்வநாதனை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இப்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனால்தான், சில மாதங்களுக்கு முன்பு பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து அவர் விலகினார். பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமான அவருக்கு டிவி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ராதிகாவாக நடித்து வந்த ஜெனிஃப்பர் விலகியதற்கு நெட்டிசன்கள் மத்தியில் வருத்தம் நிலவியது. “பழைய ராதிகாவே நடிக்க வேண்டும்” என பதிவுகளும் சமூக வலைதளத்தில் உலாவின. 


மேலும் படிக்க: Malavika Kiss: சூப்பர் சிங்கர் மாளவிகா ‛லிப் டூ லிப்’ கிஸ் - வைரலாகும் புகைப்படம்..!


இந்நிலையில், தனது கணவருடன் ஜெனிஃப்பர் எடுத்துக்கொண்ட ‘அண்டர் வாட்டர் ஃபோட்டோஷூட்’ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்த அவர், “இந்த அண்டர் வாட்டர் ஃபோட்டோஷூட் எனக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்தது. வாழ்நாளுக்கும் மறக்க முடியாத அனுபவமாக இது நினைவில் இருக்கும்” என பதிவிட்டிருக்கிறார்.


இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட 2 மணி நேரத்திற்குள் 15,000 லைக்குகளை அள்ளியிருக்கிறது இந்த புகைப்படம். வாழ்த்துகள் ஜெனிஃப்பர்!


ஜெனிஃப்பர் இன்ஸாகிராமில் பகிந்த புகைப்படம்:






மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண