விஜய் செல்வ செழிப்பில் வளர்ந்த குழந்தை, அவருக்கு இந்த சமூகத்தின் மீது என்ன அக்கறை இருக்கும் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஒரு நேர்காணலில் பேசிய ஜேம்ஸ் வசந்தனிடம் ஏன், விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என நினைக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஒரு திரைப்படத்தில் அவர் புது நடிகராக வருகிறார் என்றால் வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்பது தயாரிப்பாளரின் தலையெழுத்து. மக்கள் பார்த்தால் லாபம் அல்லது இழப்பு இருக்கும். ஆனால் தேர்தலில் நான் வாய்ப்பு கொடுக்கும்போது முன்னேறி கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடுத்த 5 ஆண்டுகளில் தடை ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?
விஜய்க்கு சினிமாவில் அறிவு இருக்கு. அரசியலில் என்ன அறிவு இருக்கிறது? எப்படி அவர் அதற்கு சாத்தியப்படுவார்?. விஜய் முன்அனுபவம் இல்லாத ஒருவருக்கு சினிமாவில் கூட படம் இயக்க வாய்ப்பு கொடுக்க மாட்டார். அவருக்கு ஒன்னும் தெரியாது. 5 அல்லது 10 ஆண்டுகள் அரசியல் செய்து அதன்பின்னர் செயல்பாடு பார்த்து கூட ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்கலாம்.
இன்று வரை விஜயால் எப்படி மேடையில் நின்று தைரியமாக கரூர் சம்பவம் பற்றி பேச முடிகிறது என்றால் அவரின் பெயர் எஃப்ஐஆர் அறிக்கையில் இல்லாததும் மற்றும் கைது செய்யப்படாததும் தான். ஜெயலலிதா இருந்திருந்தால் விஜய் அரசியலுக்கு முடிவு எட்டப்பட்டிருக்கும். விஜய் செய்ய வேண்டியதை கரூர் சம்பவம் நடந்த அன்று முதலமைச்சர் ஸ்டாலின் செய்தார்.
விஜய் செல்வ செழிப்பில் வளர்ந்த குழந்தை. கல்லூரி படிப்பு கூட வேண்டாம். சினிமா தான் வேண்டும் என முடிவெடுத்த அவருக்கு சமூகத்தின் மீது என்ன அக்கறை இருக்கும் சொல்லுங்கள். விஜய் இன்னும் சினிமாவை விடவில்லை. இப்போதுவரை தனி விமானத்தில் தான் சென்று வருகிறார். விஜய் காலம்,காலமாக உதவி செய்து வருவதாக சொல்கிறார். மனிதாபிமானம் உள்ள எல்லாரும் செய்வார்கள். அதற்கும் நிர்வாகத்தை நடத்த வேண்டும் என நினைப்பதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது சொல்லுங்கள்.
பத்திரிக்கை செய்தி மட்டுமே ஒருவரை முதலமைச்சராக்கி விட முடியாது. ஒரு ஆட்சி தவறாக செயல்படுகிறது என்பதை குற்றங்களை வைத்து முடிவு செய்ய முடியாது. குற்றம் நிகழாத ஊர்,மாநிலம், நாடு என்பது கிடையாது. குற்றம் தனிநபரால் தான் நிகழ்கிறது. விஜய் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் ஈட்டிய வருமானம் எவ்வளவு, ஆனால் தேர்தல் வேட்புமனு தாக்கலில் சொன்ன வருமானம் எவ்வளவு காட்டியிருக்கிறார் என்பதை பார்த்தாலே புரிந்து விடும்.
ரஜினிகாந்த் கூட நான் கருப்பு பணம் வாங்கியிருக்கிறேன் என சொல்கிறார். விஜய்க்கு சொல்வதில் என்ன தயக்கம்?.. தன்னை ஏன் தூயவன், தூயசக்தி என காட்டிக் கொள்கிறார்” எனவும் ஜேம்ஸ் வசந்தன் சரமாரியாக விமர்சித்துள்ளார்.
