நடிகர் மகேஷ்பாபு- நடிகை நம்ரதா ஷிரோத்கர் ஜோடி தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடியாவர். சமீபத்தில், மகேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மனைவி நம்ரதாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை தன் குழந்தைகள் எடுத்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார். 






மகேஷ்பாபு தன் குடும்பத்துடன் ஸ்காட்லாந்தில் விடுமுறையில் உள்ளார். மகேஷ் பாபுவின்  பிறந்தநாளுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளதால், குடும்பமே செலிபிரேஷன் மோடில் உள்ளது. ஆகஸ்ட் 9ஆம் தேதி, மகேஷ் பாபுவின்  48வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் குடும்பமே அந்த நாளை எதிர்பார்த்து காத்துள்ளது. 


மகேஷ்பாபுவின் இன்ஸ்டா பதிவை பார்த்த அவரின் ரசிகர்கள் மகேஷ்பாபுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டும் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மகேஷ்பாபு - நம்ரதா ஷிரோத்கர் இருவரும் 2000ஆம் ஆண்டில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டனர். அப்போதே இவர்கள் காதலித்ததாக வதந்தி பரவியது. ஆனால் அவர்கள் தங்கள் காதலை சற்று தாமதமாக அறிவித்தனர்.  இந்த ஜோடி வம்சி படத்தில் இணைந்து நடித்தது, படப்பிடிப்பின் முடிவில், அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் காதலை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரும் 2005இல் திருமணம் செய்து கொண்ட நிலையில், இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 


இவர்களின் முதல் குழந்தை கௌதம் 2006இல் பிறந்தார், அதே சமயம் சித்தாரா 2012இல் பிறந்தார். சமீபத்தில், ஒரு நகை விளம்பரத்தில் இடம்பெற்றதற்காக பிந்தையவர் அனைத்து செய்திகளிலும் இருந்தார். மேற்கூறிய விளம்பரம் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்றது. சித்தாராவின் இந்த சாதனையை மகேஷ் ரசிகர்கள் கொண்டாடினர், இந்த செய்தி சிறிது நேரம் சமூக ஊடகங்களில் அனைவராலும் பெரிதும் பேசப்பட்டது. 


மேலும் படிக்க, 


Shocking Crime: சிறுவர்களை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்த கும்பல்..பச்சை மிளகாயை கொண்டு சித்திரவதை..! மடிகிறதா மனிதம்?


PM Modi:"வேலை செய்ய விட மாட்டிங்கிறாங்க இந்த எதிர்க்கட்சிகள்” மக்களிடமே கம்ப்ளெயிண்ட் செய்த பிரதமர் மோடி..!