• தோணும்போது நடிப்பேன்... உற்சாக பாங்ரா நடனத்துடன் மனம் திறந்த ஆமிர் கான்! 


நடிகர் ஆமீர் கான் தான் உணர்வுப்பூர்வமாக தயாராக இருக்கும்போது அடுத்த படம் செய்வேன் எனக் கூறியுள்ளார்.  லால் சிங் சத்தா படத்தின் படு தோல்விக்குப் பிறகு நடிகர் ஆமீர் கான் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தான் தன் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதை விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை ‘கேரி ஆன் ஜட்டா 3’ எனும் பஞ்சாபி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஆமீர்கான் கூறியுள்ளார். மேலும் படிக்க



  • ஆபாச வீடியோ... தினமும் பாலியல் தொல்லை.. விஷ்ணுகாந்த் மீது சம்யுக்தா திடுக்கிடும் குற்றச்சாட்டு..


தன்னுடைய கணவர் விஷ்ணுகாந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக சீரியல் நடிகை சம்யுக்தா திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் நடித்த விஷ்ணு காந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்ட நிலையில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் படிக்க



  • விஜய்யுடன் கூட்டணி... காஷ்மீரில் நடந்த ஷூட்டிங் பற்றி மனம் திறந்த நடிகர் நாசரின் தம்பி!


நடிகர் நாசரின் தம்பி ஜவஹர் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்துள்ளது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.உதவி ஒளிப்பதிவாளராக தன் பயணத்தைத் தொடங்கிய அவர் முன்னதாக பனிவிழும் மலர்வனம், ஜி.வி. 2 ஆகிய படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். இந்நிலையில் லியோ படத்துக்காக காஷ்மீரில் நான் 40 நாள்கள் தங்கி இருந்தேன். என் பகுதி 15 நாள்கள் வரை படமாக்கப்பட்டது என அவர் கூறியுள்ளார். மேலும் படிக்க



  • மழையும் குடையும்...! உதயநிதியுடன் ரொமான்ஸ் செய்யும் கீர்த்தி சுரேஷ்


மாமன்னன் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இடம்பெற்றிருக்கும் போஸ்டர் முதன்முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது.மாரி செல்வராஜ் இயக்கத்தில், விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது.  இதனிடையே மாமன்னன் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இடம்பெற்றிருக்கும் போஸ்டர் முதன்முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். மேலும் படிக்க



  • 3 நாட்களை கடந்தும் நம்ப முடியவில்லை.. எமோஷனலான வரலட்சுமி.. ரசிகர்கள் ஷாக்..!


பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.  கடந்த மே 29 ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் சென்னை அணி குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதனிடையே  “3 நாட்களை கடந்தும் இன்னும் நம்ப முடியவில்லை.. எல்லா இடங்களிலும் உணர்ச்சிகளால் நிரம்பியுள்ளது.. நீண்ட இறுதிப் போட்டி.. ஆனால் மிக மிக மதிப்புமிக்கது. எல்லாம் ஒரே அணி மற்றும் ஒரே ஒருவருக்காக மட்டும் தான்.  சிறந்த தருணங்களை ஒரு ரீல் வீடியோவில் வைக்க முயற்சிக்கிறேன். மறக்க முடியாத அனுபவம்..!! வாழ்க்கையின் சிறந்த நினைவுகள்” என பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க