Actor Sathyaraj Speech : 25 ஹீரோயினை கல்யாணம் பண்ணிருக்கேன்.. மேடையை கலகலக்க வைத்த சத்யராஜ்..!

ராதே ஷ்யாம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சத்யராஜ்  பேசியதை இங்கு பார்க்கலாம். 

Continues below advertisement

சத்யராஜ் பேச்சு

Continues below advertisement

சத்யராஜ் பேசியதாவது, “பிரபாஸை நாங்கள் டார்லிங் என சொல்வோம்.பூஜா டார்லிங்கின் டார்லிங். கடவுள் நம்பிக்கை இல்லாமல் கைரேகை நிபுணராக நடித்திருக்கிறேன் என கேட்கிறார்கள். பெரியார் படத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன். ஜெர்ஸி படத்தில் கிரிக்கெட் கோச்சாக நடித்திருக்கிறேன். அப்படிதான் எடுத்து கொள்ள வேண்டும். நான் ஹீரோவாக நடிக்கும் போது 25 ஹீரோயினை கல்யாணம் செய்திருக்கிறேன். அதை என்ன சொல்வது. நடிப்பை நடிப்பாக மட்டும் எடுத்துகொள்ள வேண்டும். இந்தப்படம் மிக அழுத்தமான காதல் கதை.

பிரபாஸூக்கு  பொறுப்பு வந்துள்ளது. 

பிரபாஸ் பறந்து சண்டை போடுவார் என்றால், இதில் கப்பலே பறக்கிறது. இங்கு ஜேம்ஸ் கேமரூன் தான் வந்திருக்க வேண்டும். அவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது. பிரபாஸின் அழகுக்காகவே எடுக்கப்பட்ட படம் இது. ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகாக இருக்கிறது. பாகுபலிக்கு பிறகு பிரபாஸுக்கு முக்கியமான பொறுப்பு வந்துள்ளது. பான் இந்தியா என்று எல்லா ஸ்டேட்டிலிருந்து ஒரு நடிகரை போட்டு எடுக்கிறார்கள், ஆனால் இந்தப்படம் உண்மையில் பான் இண்டர்னேஷனல் படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.” என்று பேசினார். 

 

பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கும் இந்தப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்தப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

‘ராதே ஷ்யாம்’ படத்தின் டீசர் அக்டோபர் 23-ந் தேதி நடிகர் பிரபாஸின் பிறந்தநாளன்று வெளியானது. அதனைத் தொடர்ந்து நேற்று இந்தப்படத்தின் புதிய டிரைலர் வெளியிடப்பட்டது. ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் மார்ச் மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola