இந்தியா வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இந்திய வனத்துறை அதிகாரியான சுஷாந்தா நந்தா, தனது சமூகவலைதளப் பக்கங்களில் வனம் சார்ந்த வீடியோக்கள், வனவிலங்குகள் அதன் இரையை வேட்டையாடும் வீடியோக்கள், செல்லப்பிராணிகளின் சேட்டைகள் சார்ந்த வீடியோக்கள் என பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிடும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பையும் பெறும்.


அந்த வகையில் தற்போது அவர் ஒரு  ‘பர்சனல் ட்ரெய்னர்’ என்ற கேப்ஷனோடு ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் ஒருவர் புஷ்அப் எடுத்துக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு இருந்த கங்காரு குட்டி ஒன்று, அவரை முதுகை தனது குட்டி கைகளால் அழுத்தியது. ஆனால் புஷ் அப் எடுத்துக்கொண்டிருந்தவர் அதை கண்டுகொள்ளாமல், தொடர்ந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.


கங்காரு குட்டியும் விடாமல் அவர் புஷ்அப் எடுத்து முடியும் வரை, அவரை மேலும் கீழுமாக அழுத்திக்கொண்டே இருந்தது. இது பார்ப்பதற்கு புஷ்அப் எடுக்கும் ஒருவரை அவரது பர்சனல் ட்ரெய்னர் பயிற்சியை சரியாக செய் என்பது போல இருந்தது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், வாவ் என்ன ஒரு க்யூட் வீடியோ என்று பதிவிட்டு இருக்கிறார். 


 






நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்:










அவர் வெளியிட்ட முந்தைய வீடியோக்கள்: