Baahubali : பாகுபலி பிரபாஸூக்கு அபராதம் விதித்த போலீசார்.. ஏன் தெரியுமா?

முன்னதாக, போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நடிகர் நாக சைதன்யாவுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதுதொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது.

Continues below advertisement

போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதால் நடிகர் பிரபாஸூக்கு போலீசார் அபராதம் விதித்தனர். காரின் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஜூப்ளி ஹில்ஸ் சாலை எண்.36இல் தவறான நம்பர் பிளேட் மற்றும் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு நின்ற காருக்கு ரூ.1600 அபராதம் விதித்ததாகவும், வாகனத்தில் நடிகர் இல்லை எனவும் போலீசார் கூறினர்.

ஹைதராபாத் போக்குவரத்து போலீசார் தவறான நம்பர் பிளேட்டுகள் மற்றும் கருப்பு ஸ்டிக்கருக்கு எதிராக சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் 1000 க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் உள்ளதால் கருப்புப் படத்தை அகற்றுமாறு கார் உரிமையாளர்களிடம் போலீசார் கேட்டுக் கொண்டனர்.

Naga Chaitanya : போலீசாரிடம் சிக்கிய சமந்தாவின் முன்னாள் கணவர்.. வைரலாகும் புகைப்படம்..

முன்னதாக, போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நடிகர் நாக சைதன்யாவுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதுதொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது.

நாக சைதன்யா டோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரும், தென்னிந்திய நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும் ஆவார். இருவரும் 2021 இன் பிற்பகுதியில் தங்கள் 4 ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து பிரிந்தனர். இதற்கிடையில்,  ‘மாநாடு’ வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தனது அடுத்த படத்தில் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

சமீபத்தில், ஹைதராபாத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நாக சைதன்யாவுக்கு காவல்துறை அபராதம் விதித்தது. ஜூப்லி ஹில்ஸ் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நாக சைதன்யா, டொயோட்டா வெல்ஃபயர் காரில் கருப்பு நிற ஸ்டிக்கர்களை பயன்படுத்தியதற்காக ரூ.700 அபராதம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அவர் அபராத தொகையை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.

அபராதம் செலுத்திய பிறகு அவரது வாகனத்தில் இருந்த ஸ்டிக்கர்களை போலீசார் அகற்றினர். சமீபகாலமாக இதே காரணத்துக்காக டோலிவுட் பிரபலங்களை ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் மடக்கிப்பிடித்து வருகின்றனர். முன்னதாக ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு அபராதம் செலுத்தினர்.

Selvaragavan Dir Mohan G Next: முத்துமலை முருகன் கோவிலில் பூஜை! தொடங்கியது செல்வா - மோகன் ஜி படம்.. டைட்டில் இதுதான்!!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement
Sponsored Links by Taboola