Ashok Selvan: கீர்த்தி பாண்டியனின் நிறம் குறித்து எழுந்த விமர்சனத்திற்கு, உலகத்திலேயே தனக்கு ரொம்ப அழகான பெண் தன் மனைவி தான் என நடிகர் அசோக் செல்வன் பதிலளித்துள்ளார். 


தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வரும் அசோக் செல்வனிற்கும், நடிகர் அருண் பாண்டியனின் மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியனுக்கும் கடந்த செப்டம்பர் 13ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகில் உள்ள இட்டேரியில் நடந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். பின்னர், திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. 


அசோக் செல்வன் - கீர்த்தி திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானபோது, அசோக் செல்வனிற்கு வேறு பெண்ணே கிடைக்கவில்லையா என்றும், கீர்த்தி பாண்டியனின் நிறம் மற்றும் அவரது தோற்றம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஊடகம் ஒன்றிற்கு நேர்க்காணல் தந்துள்ளனர். அதன் புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 


அதில், இருவருக்கும் 10 வருடத்திற்கு முன்பு பார்த்த முதல் சந்திப்பிலேயே காதல் வந்துவிட்டதாக அசோக் செல்வன் கூறியுள்ளார். கீர்த்தி பாண்டியன் பேசும்போது, “ திருமணத்தில் எனக்கு புரொபோஸ் செய்ய அசோக் செல்வன் பிளான் பண்ணியிருந்தார். ஆனால், மழை பெய்ததால் திருமணம் நடைபெற்ற இடத்தில் கடல் நீர் உள்ளே வந்து கொண்டிருக்கிறது. அது முடியாது என ஹோட்டல் ஊழியர்கள் கூறியுள்ளனர். அதற்கு கடல் தண்ணீர் உள்ளே வந்தாலும் பரவாயில்லை. நான் புரொபோஸ் செய்வேன் என கூறி பிடிவாதமாக அசோக் எனக்கு புரொபோஸ் செய்தார்” என கூறினார்.


தொடர்ந்து பேசிய அசோக் செல்வன், “கீர்த்தி அப்பாகிட்ட போயிட்டு உங்கள் பெண்னை பிடிச்சிருக்கு என்றேன்.  கீர்த்தி எல்லாரும் செய்யும் இடத்தில் எங்கள் திருமணம் நடக்க வேண்டாம் என்றார். அதனால், திருமணத்திற்காக பதிவு செய்யப்பட்ட மண்டபங்களை ரத்து செய்தோம்” என்றார். அடுத்ததாக பேசிய கீர்த்தி பாண்டியன், தாலிக்கட்டும்போது மூன்று முடிச்சியையும் நீயே போட வேண்டும் என அசோக் செல்வனிடம் கூறியதாக தெரிவித்தார். வீடியோவின் இறுதியில், கீர்த்தியின் நிறம் குறித்த விமர்சனம் கேள்வியாக வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அசோக் செல்வன், “ உலகத்திலேயே எனக்கு நொம்க அழகான பெண் கீர்த்தி தான்” என்றார். 


இதற்கிடையே, நேர்க்காணலின் போது அசோக் செல்வன் தாலி கட்டும் புகைப்படம் காட்டப்பட்டது. அதை பார்த்த கீர்த்தி பாண்டியன் எமோஷ்னலாகி அழுதுவிட்டார். 


 


மேலும் படிக்க: Vijay Sethupathi: "ஜெயம் ரவிகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க”.. சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த விஜய் சேதுபதி..!


Nithya Menen: தமிழ் நடிகர் பாலியல் தொல்லை கொடுத்தாரா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யா மேனன்!