தஞ்சாவூர்: தமிழ், கன்னடம், மலையாளம், மராட்டி உள்பட 13 மொழிகளில் பொறியியல், பட்டயக் கல்வி பாடத்திட்டங்களை உருவாக்கி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுத் தலைவர் டி.ஜி. சீத்தாராம் தெரிவித்தார். தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 37வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு தலைவர் சீத்தாராம் பேசியதாவது: தேசியக் கல்விக் கொள்கை மூலம் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம். ஆய்வும், புத்தாக்கமும் நம் நாட்டின் பல்வேறு துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் மூலம் நம் நாடும் வளர்ச்சி அடைந்து வருகிறது. தகவல் தொடர்பு தொழில்நுட்பம், கைப்பேசி தொழில்நுட்பத்தில் சாட் ஜிபிடியால் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. மனித ஆற்றலுக்கு பதிலாக சாட் ஜிபிடி பயன்படுத்தப்படுவதால், ஏராளமான வேலைவாய்ப்புகள் மறைந்துவிடும். அதே சமயம், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். எனவே, எண்ம தொழில்நுட்பத் திறன் காரணமாக இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உலக முழுவதுக்கும் அதிக அளவில் பட்டதாரிகளை அனுப்பி வைக்கும் நாடாக இந்தியா உருவாகி வருகிறது. அதாவது, இருபது லட்சம் பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். இவர்களில் 40 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். சந்திரயான் 3 திட்டத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.
13 மொழிகளில் பொறியியல், பட்டயக்கல்வி பாடத்திட்டம் - அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு தலைவர் தகவல்
என்.நாகராஜன் | 11 Sep 2023 08:04 PM (IST)
உலக முழுவதுக்கும் அதிக அளவில் பட்டதாரிகளை அனுப்பி வைக்கும் நாடாக இந்தியா உருவாகி வருகிறது. அதாவது, இருபது லட்சம் பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். இவர்களில் 40 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர்.
சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக 37வது பட்டமளிப்பு விழா
Published at: 11 Sep 2023 08:04 PM (IST)