விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த சாரம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் மகன் ரவி. இவருடைய மனைவி சித்ரா, இவர்களின் மகள் பச்சையம்மாள் என்பவருக்கு வருகிற 27-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ரவி பணிக்கு சென்று விட்டார். திருமணத்துக்கு ஜவுளி எடுப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சித்ரா, இவரது அக்கா ஞானசவுந்தரி மற்றும் உறவினர்களுடன் நேற்று முன்தினம் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.


பின்னர், நேற்று காலையில் வந்து பார்த்த போது வீட்டின் கதவில் போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரவி உள்ளே சென்ற பார்த்த போது பீரோவின் கதவுகள் திறந்து கிடந்தது. அதில் திருமணத்துக்காக வைத்திருந்த 5 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம்  ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.


அதேபோல்,  ஞானசவுந்தரி என்பவரின் வீட்டில் புகுந்து ¾ பவுன் நகை, ரூ.10 ஆயிரத்து 500 ரொக்கம், அதே பகுதியை சேர்ந்த கோகிலாம்மாள் என்பவரின் வீட்டில் புகுந்து ¼ பவுன் மோதிரம், பென்ஷன் பணம் ரூ.6 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளயைடித்து சென்றுள்ளனர். இதுபற்றிய தகவல் அறிந்து ஒலக்கூர் உதவி காவல் ஆய்வளர் ஆனந்தராசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.


மேலும் உதவி காவல் ஆய்வளர் அசாருதீன் தலைமையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோ, கதவுகளில் இருந்த கைரேகைகளை சேகரித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி  கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார்  தேடி வருகிறார்கள். திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் சாரம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 




விழுப்புரம் மாவட்ட செய்திகள் : 


Crime: ஆவின் பால் பூத் வைப்பதில் தகராறு; விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தி.மு.க. நிர்வாகி - பெரும் அதிர்ச்சி..!


துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்


விழுப்புரம்: சாதி ரீதியாக வேற்றுமை; மறு தேர்விற்கு ஹால் டிக்கெட் வரவில்லை; முதல்வர் தனி பிரிவுக்கு புகார்


புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.