விழுப்புரம்: மரக்காணம் அருகே பேருந்து மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். 


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்து மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்துக்கள்ளானது. இதில் ஆட்டோவில் சென்ற ஐந்து நபர்களில் ஆட்டோவில் பயணம் செய்த சென்னை சேர்ந்த ஓட்டுனர் பொன்முடி என்பவரின் மகன் மணிகண்டன் மற்றும் சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த ரவி ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.




மேலும் சென்னை, வெஸ்ட் ஜாபர்கான் பேட்டை சபாபதி (வயது 39), மனோகர் (வயது 38), ராஜீவ் காந்தி (வயது 30) 3 நபர்கள் பலத்த காயங்களுடன் உயிரேக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மரக்காணம் காவலர்கள் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து மரக்காணம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து மற்றும் ஆட்டோ விபத்துக்கள்ளாகி இரண்டு நபர்கள் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் கட்டாயம்: உயர் கல்வித்துறை உத்தரவு


shashi tharoor : காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆகிறாரா சசிதரூர்? உள்கட்சித் தேர்தல் பரபரப்பு




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர