தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே வனத்துறை சோதனை சாவடியில் வனத்துறை ஊழியர்கள் மீது  தாக்குதல் நடத்தி படுகாயம் அடையச் செய்த நான்கு பேரை கைது செய்த போலீசார், தலைமறைவானவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து மேகமலை ஹைவேவிஸ் தேயிலை தோட்ட பகுதி மற்றும் சுற்றுலா தல பகுதிக்கு செல்லும் வனச்சாலையில் தென்பழனி அருகே வனத்துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த சாலையில் மாலை ஆறு மணி முதல் அதிகாலை எட்டு மணி வரை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருவதற்கு வனத்துறையினர் தடை விதித்து வருகின்றனர்.


Non-Veg Food Ban: அதிர்ச்சி; உலகிலேயே முதல் நகரம்- குஜராத்தில் அசைவ உணவுகளுக்குத் தடை!




நாள்தோறும் இரவு மற்றும் பகல் நேரங்களில் வனத்துறை அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்நிலையில் வனக்காப்பாளர் காசி மற்றும் வேட்டை தடுப்பு காவலர் தருண் ஆகியோர் வழக்கம்போல் சோதனை சாவடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது நள்ளிரவில் காரில் கும்பலாக வந்த ஒரு சிலர் தாங்கள் பத்திரிகையாளர்கள் எனக் கூறி மேகமலை வனப் பகுதிக்கு செல்வதற்கு அனுமதிக்க வேண்டுமென அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


"கல்வித்துறையில் காமராஜர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது" பிரதமர் மோடி புகழாரம்!


அப்போது அனுமதிக்க மறுத்த வனத்துறை அலுவலர்களை அவர்கள்  சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற சின்னமனூர் வனச்சரக வனத்துறை அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு காயமடைந்தவர்களை சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


Watch video : அம்பானி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒலித்த 'ஜெய் ஹோ'.. ஏ.ஆர். ரஹ்மான் செய்த மேஜிக்!


அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஓடைப்பட்டி காவல் நிலைய போலீசார் தேனி அருகே உள்ள முத்து தேவன் பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார், செல்வம், சிவா மற்றும் பாலர்பட்டியை சேர்ந்த மலைச்சாமி ஆகிய நான்கு பேரை கைது செய்து மேலும் தலைமறைவாகியுள்ளவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.