கர்நாடக சட்டசபை கூடும் விதான சவுதாவில் வெடுகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலி தகவல் கொடுத்த ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் சட்டசபை கூடும் இடமான விதான சவுதாவில் தினமும் பல அமைச்சர்கள் , கட்சித்தொண்டர்கள் வந்து போவது வழக்கம். பரபரப்பான இந்த இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மர்ம நபர் ஒருவர் , கர்நாடக அரசின் முதன்மை செயலாளருக்கு மொபைல் மூலம் தொடர்புக்கொண்டு கூறியிருக்கிறார். தொடர்ந்து 3 முறை அழைத்து , வெடிகுண்டு இருப்பதாக அந்த நபர் பரபரப்பாக பேசியதால், அதிர்ந்து போன முதன்மை செயலாளர் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து , சட்டசபையின் உள்ளேயும் வெளியேயும் தீவிர சோதனை செய்தனர். ஆனால் அங்கு எந்த வித வெடிகுண்டோ , அதனை வைக்க முயற்சித்ததற்கான அடையாளமோ இல்லை. முடிவில் அது போலியான தகவல் என்றும் , திட்டமிட்டே அந்த நபர் செய்திருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து , தனியாக ஒரு குழு அமைத்து சம்பந்தப்பட்ட அந்த நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்த விசாரணையில் தொடர்புடைய ஒரு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் , “குற்றம் சாட்டப்பட்டவருக்கு குற்ற வரலாறு இல்லை. அந்த நபரை தற்போது கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறோம்” என்றார். இந்த சம்பவம் கர்நாடகாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க..
David Miller : உலகை விட்டுப் பிரிந்த குட்டி ரசிகை..! மனம் உடைந்து போன டேவிட் மில்லர்..!