தனது டியூஷன் டீச்சரின் ஆபாச வீடியோக்களை பதிவு செய்ததற்காக சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புனேவில் நடந்துள்ளது.


16 வயது மாணவன் தனது 56 வயது ஆங்கிலப் டியூசன் டீச்சரின் ஆபாச வீடியோக்களை பதிவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும், சிறுவனுக்கு எதிராக டீச்சர் போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். மாணவன் பாத்ரூமில் மொபைல் போனை வைத்து வீடியோக்கள் மற்றும் படங்களை எடுத்ததாக செய்ததாக டீச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.


இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி சங்கீதா பாட்டீல், ஆபாச வீடியோவைக் கொண்ட மொபைல் ஃபோனை மீட்டுள்ளதாகவும், டீச்சரின் குற்றச்சாட்டு விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார். மாணவன் சுமார் ஒரு மாதமாக தன்னை பதிவு செய்ததாகவும் ஆசிரியர் குற்றம் சாட்டினார் என்று போலீஸ் அதிகாரி கூறினார்.


மேலும் படிக்க: Crime: தாயுடன் தவறான தொடர்பு.. சேர்த்துவைத்த ஆத்திரம்.. கொலையாளியான 20 வயது இளைஞன் கைது


மாணவனுக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவரது தற்போதைய  தேர்வுகளைக் கருத்தில் கொண்டு, இந்த சம்பவம் குறித்து சிறார் நீதி வாரியத்திற்கு அறிவிக்கப்பட்டது என்றும் தெரிவித்த போலீஸ் அதிகாரி, சிறுவன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் பிரிவு 66e ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.


கடந்த ஐந்து வருடங்களாக அந்த ஆசிரியை அந்த மாணவனின் வீட்டிற்குச் சென்று இங்கிலீஷ் டியூசன் எடுத்து வந்துள்ளார். டீச்சர் பாத்ரூமுக்கு சென்றபோது, ​​ஸ்மார்ட்ஃபோன் இருப்பதைக் கவனித்துள்ளார். அந்த டீச்சர் சந்தேகமடைந்து, மாணவனிடம் செல்போனை காண்பிக்கச் சொன்னார். செல்போன் திறக்கப்பட்டபோது, ​​ஏற்கனவே பதிவாகியிருந்த வீடியோவில் தன்னைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.


மேலும் படிக்க: Crime: 10 ஆயிரம் கடன் கொடுத்து பயங்கரம்.. பாலியல் தொழிலில் சிறுமியை சிக்கவைத்த பெண் கைது..


மேலும் படிக்க: Crime : பெண் உறுப்பில் மிளகாய் பொடி... 10 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை.. 9 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண