மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்...என்ன நடக்கிறது மயிலாடுதுறை மாவட்டத்தில்...?

சீர்காழி அருகே நான்கரை வயது பெண் குழந்தையிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக உறவினரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நான்கரை வயது பெண் குழந்தையிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக உறவினரிடம் அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்திவரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

துக்க நிகழ்வுக்கு வந்த தம்பதியினர் 

கோயம்புத்தூர் வசித்து வரும் டிரைவர் மற்றும் அவரது மனைவி தம்பதியர் இருவரும் கடந்த பிப்ரவரி 28 -ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையம் உட்பட்ட பகுதியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளனர். அதனை தொடர்ந்து அவர்கள் அங்கேயே தங்கி இருந்துள்ளனர். 

காணாமல் போன பெண் குழந்தை 

இந்நிலையில் நேற்று மதியம் அவர்களது நான்கரை வயது மகள் காணாமல் போயுள்ளார். இதனை அடுத்து பதறி போன குழந்தையின் பெற்றோர் அக்கம் பக்கம் என பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அந்த சமயத்தில் அருகில் ஒரு கொட்டகை ஒன்றில் குழந்தை அழுது கொண்டிருந்தது சந்தம் கேட்டுள்ளது. இதனை அடுத்து அந்த குழந்தையை அவரது தாயார் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்தக் குழந்தை பாலியல் சீண்டலுக்கு ஆளானது தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் விசாரணை 

இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர், இதுகுறித்து சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செல்வி தலைமையிலான காவல்துறையினர் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

NEET UG 2025: இன்னும் சில நாட்கள்தான்; நீட் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட என்டிஏ!

தொடரும் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் 

மேலும் சிறுமி பாலியல் சம்பவம் தொடர்பாக இன்று காலை சந்தேகத்தின் பேரில் குழந்தையின் உறவினர் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 24-ம் தேதி மூன்றுவை வயது பெண் குழந்தை 16 வயது சிறுவனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதுகுறித்து சர்ச்சையாக பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த பரபரப்பான சூழலில் மீண்டும் சீர்காழி பகுதியில் ஒரு பெண் குழந்தை பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்படும் குழந்தைகள் 

குழந்தைகள் வீடுகளிலும், வீடுகளில் அருகிலுள்ள நபர்களை மட்டுமே நம்பி விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் பெரும்பாலான குழந்தைகள் நன்கு அறிமுகம் ஆன நபர்களா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். நன்கு அறிமுக ஆன கொடூர வக்கிர புத்தி கொண்ட மனித வடிவிலான மிருகங்கள் குழந்தைகளை கடவுளுக்கு நிகராக எண்ணாமல், அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டல்களிலும், துன்புறுத்தல்களும் செய்து வருகின்றன. உறவினர்கள், நண்பர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவை அழிப்பதில் தற்போது விதிவிலக்காக யாரும் இல்லை. இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு கூடுதல் முக்கியத்துவம் அளித்து இவற்றை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola