மயிலாடுதுறை சேந்தங்குடியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி என்பவரின் மகன் 34 வயதான சீனிவாசன். இவர் மயிலாடுதுறையில் தனியார் பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும்,  இவர் அப்பள்ளியின் கூடுதலாக  மாணவர்கள் விடுதியையும் கண்காணித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணமாகாத இவர், அதே பள்ளியில் 9 -ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவன் ஒருவரிடம் தகாத முறையில் தன்பாலின ஈர்ப்புக்கு வற்புறுத்தியுள்ளார். 




FIFA WORLDCUP 2022: ஒரு வழியாய் நடந்து முடிந்த ஃபிபா உலகக்கோப்பை போட்டி: 3,580 கோடி பரிசுத்தொகையில் யாருக்கு எவ்வளவு? - முழு விவரம்


பயத்தின் காரணமாக இதனை வெளியில் சொல்ல முடியாத சிறுவன், அதே விடுதியில் தங்கி 6 -ஆம் வகுப்பு படிக்கும் தனது தம்பியிடம் மட்டும் இதுபற்றி கூறியுள்ளார். அந்த சிறுவன் உடனே தனது அண்ணனிடம் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டது குறித்து தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதனிடையே, மாணவனிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் சீனிவாசனை பணி நிர்வாகம் பள்ளியில் இருந்து நீக்கியது.  




அதனைத் தொடர்ந்து விஷயம் வெளியே தெரிந்ததை அறிந்த ஆசிரியர் சீனிவாசன் எலிபேஸ்ட் விஷத்தைத் தின்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன்காரணமாக, மயங்கி விழுந்த சீனிவாசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஆசிரியர் சீனிவாசன் குணமடைந்து  மயிலாடுதுறை பேருந்து நிலையம் வந்தவரை  பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்தனர். 


FIFA WORLDCUP 2022: உலகக்கோப்பை வென்ற அர்ஜெண்டினா: தமிழக முதல்வர், இந்திய பிரதமர் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து..!




தொடர்ந்து ஆசிரியருக்கு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்த போலீசார், நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில் ஆசிரியர் 10 -க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தது தெரிய வந்தது. ஆசிரியர் மாணவர்களிடம் பாலியல் ரீதியாக நடந்துக்கொண்ட  சம்பவம்  மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


FIFA WORLDCUP 2022: பரபரப்பான உலகக்கோப்பை தொடர்: கோல்டன் பூட்டை தவறவிட்டு கோல்டன் பந்தை கைப்பற்றிய மெஸ்ஸி..!