POCSO: மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் வைத்த கொடூர ஆசிரியர்.. துவைத்தெடுத்த குடும்பத்தினர்..!

தன்னை திருமணம் செய்ய மறுத்த மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை பொதுவெளியில் பகிர்ந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

தன்னை திருமணம் செய்ய மறுத்த மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை பொதுவெளியில் பகிர்ந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சவுதத்தி தாலுகா எக்குந்தி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு மகேஷ் சிவலிங்கப்பா பிரதாரா (44) என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னிடம் பயின்று வந்த பெண் மாணவியுடன் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது. மேலும் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக உறுயளித்து பயன்படுத்திவந்த அந்த ஆசிரியர், கடந்த ஆறு வருடங்களாக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. 

தற்போது கல்லூரியில் பி.காம் 2-ஆம் ஆண்டு படித்துவரும் மாணவியின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளது. இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ஆசிரியர் மகேஷ் மாணவி 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது இருவரும் நெருங்கி இருந்த அந்தரங்க புகைப்படங்களை தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார். 

இதைப்பார்த்து ஆத்திரமடைந்த மாணவியின் குடும்பத்தார், நேரடியாக பள்ளிக்கே சென்று ஆசிரியரை சரமாரியாக தாக்கினர்.மேலும் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அவரை காவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola