Crime: ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த தாய் மோட்டோ ஜங்கம்மா தனது சேலையால் பார்கவியின் கழுத்தை நெரித்திருக்கிறார். இதனால், சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்துள்ளார். 


மகளை கொன்ற தாய்:


தெலங்கானா  மாநிலம் ஹைதரபாத்தைச் சேர்ந்தவர் மோட்டே ஜங்கம்மா (46). இவரது மகள் பார்கவி. இளம்பெண் பார்கவி அதே பகுதியைச் சேர்ந்த சஷி என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் பார்கவி வீட்டிற்கு தெரியவர, இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு சாதி நபரை திருமணம் செய்ய பார்கவி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதனை அடுத்து, பார்கவியின் தாய் வேறொரு நபரை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர்.  இதற்கு பார்கவி மறுப்பு தெரிவித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று காலை பார்கவி தனது காதலன் சஷி வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது, பார்கவியின் தாய் மோட்டே ஜங்கம்மா சஷி வீட்டிற்கு வந்திருக்கிறார். இவருடன் பார்கவியின் மாமா வந்துள்ளதாக தெரிகிறது. 


வேறு சாதி நபரை காதலித்ததால் ஆத்திரம்:


வீட்டிற்குள் நுழைந்த இருவரும் பார்கவியிடம் தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர்.  பார்கவியை தாய் மோட்டே ஜங்கம்மா கடுமையாக தாக்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த தாய் மோட்டோ ஜங்கம்மா தனது சேலையால் பார்கவியின் கழுத்தை நெரித்திருக்கிறார். இதனால், சம்பவ இடத்திலேயே பார்கவி உயிரிழந்துள்ளார். 


இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து  குற்றம்சாட்டப்பட்ட மோட்டே ஜங்கம்மாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பார்கவியின் 17 வயதான சகோதரர் கூறுகையில், "நான் வீட்டிற்குள் நுழைந்தபோது, எனது தாய், சகோதரி பார்கவியை கழுத்தை நெரித்தார். பார்கவி தனது தாயிடம் கெஞ்சினார். அப்போதும், தாய் ஜங்கம்மா விடமல் பார்கவியின் கழுத்து நெரித்துள்ளார்.


என் மாமாவின் உதவியுடன் வீட்டிற்குள் நுழைத்து கொலை செய்துள்ளார். இதனால், பார்கவியின் மூக்கு, வாய், காதுகளில் ரத்து வழிந்துக் கொண்டிருந்தது. உடனே சம்பவ இடத்திற்கு மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்ததில் பார்கவி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்" என்று கூறினார். வேறு சாதி நபரை காதலித்த ஆத்திரத்தில் மகளை, தாய் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் படிக்க


UP Crime: 2 குழந்தைகள் கொடூர கொலை! உத்தர பிரதேசத்தை அதிரவைத்த சம்பவம் - பகீர் காரணம்!