புதுச்சேரியில் மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பூட்டிய வீட்டில் துர்நாற்றம்:-


புதுச்சேரி சாமிப்பிள்ளைதோட்டம் கம்பர் வீதியை சேர்ந்த புருஷோத்தமன் மனைவி அஞ்சலை (வயது 80). கணவர் இறந்த நிலையில், வளர்ப்பு மகளுடன் வசித்து வந்தார். தற்போது அவரும் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அஞ்சலை வீட்டின் கதவு மூடியே இருந்தது. நேற்று இரவு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.


வீடு உடனே சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம், லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மூதாட்டி அஞ்சலை பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்து மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மூதாட்டி காதில் அணிந்திருந்த தங்க கம்மல், வளையல் காணவில்லை. வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு தெரிந்து கொண்டு அவரை கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து இருக்கலாம் என்பது தெரியவந்தது.



மேலும், இந்த பயங்கர சம்பவத்தை அரங்கேற்றி மர்ம ஆசாமிகள் தடயங்களை மறைக்க கொலை நடந்த வீட்டில் மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பிச் சென்று உள்ளனர். இதுதவிர வீடு பூட்டிக் கிடந்த நிலையில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். வீட்டை பூட்டி விட்டு சாவியை மர்ம ஆசாமிகள் எடுத்துச் சென்று இருப்பதும் தெரியவந்துள்ளது. போலீசார் வந்து பார்த்த போது பூட்டிக் கிடந்த வீட்டை அதன் உரிமையாளரிடம் இருந்து மாற்றுச் சாவியை வாங்கி கதவை திறந்துள்ளனர்.


வீட்டு கதவு பூட்டப்பட்டு இருந்த நிலையில் இந்த கொலையில் தொடர்புடையவர்கள் மூதாட்டிக்கு தெரிந்தவர்களாக அல்லது அந்த பகுதியை சேர்ந்தவர்களாக தான் இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து வைத்துக் கொண்டு மூதாட்டியை கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி - கலால் துறை அறிவிப்பு




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண