காவல் நிலையத்தில் விஷம் அருந்திய விவசாயி உயிரிழப்பு; வேடிக்கை பார்த்த போலீஸ்

அம்மை நாயக்கனூர் காவல் நிலயத்தில் புகார் வாங்க மறுத்த போலீசார் முன்பு விஷம் அருந்திய விவசாயி உயிரிழந்த சோகம்.

Continues below advertisement

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அம்மைநாயக்கனூர் காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொடைரோடு கன்னிமார் நகரைச் சேர்ந்த பாண்டி என்ற விவசாயி தனக்கு சொந்தமாக இதே பகுதியில் ஒன்றை ஏக்கர் விவசாயம் நிலம் வாங்கியுள்ளார். அதில் தான் தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறேன். இதை வைத்துதான் வாழ்வாதாரத்தை வளர்த்து வரும் சூழ்நிலையில் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர் , நாச்சியப்பன், சின்ன கருப்பு உருப்பட மூன்று பேரும் சேர்ந்து தனது நிலத்தை அபகரிக்க நினைக்கிறார்கள் என்றும், அடியாட்களை கொண்டு தன்னையும் தனது மகனையும் தனது குடும்பத்தாரையும் தாக்கி வருவதாகவும்

Continues below advertisement

Kiss day: கிஸ் டே.. காதலே இல்ல, அப்புறம் எங்க முத்தம்.. மீம்ஸ்களில் ஆதங்கத்தை கொட்டும் சிங்கில்ஸ்

காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்றும் கூறி மிரட்டி உள்ளதாகவும், இதையடுத்து அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சண்முக லட்சுமியிடம் விவசாயி பாண்டி புகார் மனு அளித்துள்ளார். புகார் மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றம் மூலம் உடனடியாக பாண்டியை மிரட்டும் பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

அந்த உத்தரவு நகலையும் பெற்றுக் கொண்டு பாண்டி காவல் நிலையத்திற்கு சென்றபோது, காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக கடந்த ஏழாம் தேதி இரவு அம்மைநாயக்கனூர் காவல் நிலையம் சென்று தான் கொடுத்த புகாருக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். காவல்துறையினர் கண்டுகொள்ளாதால் தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை காவல்துறை ஆய்வாளர் சண்முக லட்சுமி மற்றும் அங்கு பணிபுரியும் காவல் துறையினர் முன்பு விஷம் அருந்தி உள்ளார் .

Gold Rate: ஹேப்பி நியூஸ் பெண்களே... குறைந்தது தங்கம்! இன்றைய நிலவரம் என்ன?

இதை பார்த்த காவல்துறை ஆய்வாளர் உட்பட எந்த ஒரு காவலரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி விவசாயி பாண்டி யார் மீது புகார் அளித்தாரோ அவர்களுக்கு செல்போனில் பேசும் ஆடியோ மற்றும் விவசாயியை வேடிக்கை பார்க்கும் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறையினர் கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் ஒரு நபர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றும் அதை வேடிக்கை பார்த்து தொலைபேசியில் பேசி வருகின்றார்.

Prabhakaran: பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்- பழ . நெடுமாறன் பரபரப்பு பேட்டி


அதை ஒருவர் வீடியோ எடுத்து வருகிறார். மேலும் விவசாயி பாண்டி திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி உயிரிழந்தார்.  சாலையில் ஒரு நாய் அடிபட்டாலே ஓடோடி தூக்கிச் செல்லும் தமிழகத்தில் காவல் நிலையம் முன்பு விவசாயி ஒருவர் விஷ மருந்து தற்கொலை செய்து கொண்டதை வேடிக்கை பார்த்த இதுபோன்ற ஈவு இரக்கமில்லாத காவல்துறை ஆய்வாளர் உட்பட அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola