திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள காசம்பட்டியை சேர்ந்தவர் கணேசன். அவருடைய மகன் ஜோதி (27). வெளிநாட்டில் வேலை செய்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். பின்னர் அவர் வெளிநாடு செல்லாமல், தனது தோட்டத்தில் தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்துள்ளார். தினமும் இரவில் ஜோதி, தனது தோட்டத்து வீட்டில் படுத்து தூங்குவது வழக்கம். அதன்படி நேற்று இரவு தோட்டத்து வீட்டில் ஜோதி தூங்கினார்.


Tirumala Express Fire : திருப்பதியில் திருமலா விரைவு ரயிலில் தீ விபத்து...மக்களுக்கு என்ன ஆச்சு? நடந்தது என்ன?




இந்தநிலையில் வெகு நேரமாகியும் தோட்டத்து வீட்டில் இருந்து, காசம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு ஜோதி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை கணேசன், தோட்டத்துக்கு சென்று பார்த்துள்ளார். தோட்டத்து வீட்டில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ஜோதி பிணமாக கிடந்துள்ளார்.


தோட்டத்து வீட்டில் தனியாக படுத்திருக்கும் ஜோதியை நோட்டமிட்டு மர்ம நபர்கள் அவரை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. ஜோதியின் உடலை பார்த்து கணேசன் கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். 


நடைபயிற்சி.. மயக்கம்.. வேதனையில் ஆழ்த்திய மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்பு.. ஆளுநர் தமிழிசை அஞ்சலி


இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம்  காவல் நிலைய ஆய்வாளர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.




CM Stalin Letter: கட்சியை நம்பினோர் ஒருபோதும் கைவிடப்படார்.. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..


மேலும் மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது மோப்பநாய் தோட்டத்து வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் அடையாளம் காட்டவில்லை. இதேபோல் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.  இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் ஜோதி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண