ஆந்திராவில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஒருவர் எரித்து சொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் அல்வா பகுதியைச் சேர்ந்தவர் ஆமோஸ் (26). இவர் அதே பகுதியைச் சேர்ந்த அருணா என்ற பெண்ணை காதலித்தார்.  இருவரும் நான்கு ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இருவீட்டு பெற்றோரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


 இதனால் சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்பு, அதே பகுதியில் வசித்து வந்த அவர்கள், வீட்டைவிட்டு வெளியே வந்த சில நாட்களிலேயே திருமணம் செய்து கொண்டனர். கர்னூல் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆமோஸ் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.


 இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக  ஆமோஸை காணவில்லை என அவரது மனைவி அருணா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்பு, கர்னூரில் உள்ள ஆற்றங்கரை அருகே இருந்த காட்டில், பாதி எரிந்த நிலையில் ஒரு இளைஞரின் உடலை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து விசாரணை செய்ததில் இது அமோஸ் உடல் என தெரிந்தது.


அமோஸை அரிவாளால் வெட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.  மாற்றுச் சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் ஆமோஸ் கவுரவ கொலை செய்யப்பட்டரா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கொலை செய்யப்பட்டரா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


மற்றொரு சம்பவம்


மகாராஷ்டிரா ஜல்னா பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அதே பகுதியில் இருக்கும் அவரது உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து தனது பெற்றோருக்கு தெரிவித்தபோது அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் அந்த சிறுமியின் குடும்பத்தினர் வேறொரு நபருடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். 


இதனை அறிந்த அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியே செல்ல திட்டமிட்டார். அதன்படி தனது காதலனுடன் அந்த சிறுமி வீட்டைவிட்டு வெளியே சென்றார். சில நாட்கள் கழித்து அந்த சிறுமியை அவரது பெற்றோர்கள் சந்தித்து திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்தனர்.


பின்பு, இருவீட்டாருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் திருமணம் கடைசி நேரத்தில் நின்றுவிட்டது. இதனால் ஆத்திரமடைந்து அவர் தந்தை சிறுமியின் கழுத்தை வீட்டின் பக்கத்தில் இருக்கும் மரத்தில் தூக்குப் போட வைத்துள்ளார். இந்த சம்பவம் யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக சிறுமியின் உடலை ஏரித்து கொலை செய்துள்ளார். பின்பு இது போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து, உயிரிழந்த சிறுமியின் தந்தை மற்றும் மாமா கைது செய்யப்பட்டுள்ளனர்.




மேலும் படிக்க


Crime: கார் டிரைவருடன் கனெக்‌ஷன்.. காதலுக்கு தடையாக இருந்த கணவர்: கூலிப்படையை வைத்து கொலை செய்த பெண் எஸ்.எஸ்.ஐ!


Crime: 15 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... 6 பேர் கைது! மும்பையில் அதிர்ச்சி...