Crime: ஒடிசாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தற்போது ஒரு சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. 
 
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் 5 வயது சிறுமி. சம்பவத்தன்று காலை சிறுமியின் பெற்றோர்கள் வேலைக்கு சென்றிருக்கின்றனர். இதனால், சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். சிறுமி தனியாக இருந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்துள்ளார். முதலில் சிறுமியிடம் பேச்சு வார்த்தை கொடுத்துள்ளார். பின்னர், சிறுமிக்கு சாக்லெட் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை அடுத்து, சிறுமியை அருகில் இருக்கும் கடைக்கு அழைத்து சென்று சாக்லெட் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர், சிறுமியை அவரது வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார்.


பின்னர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதோடு இல்லாமல், சிறுமியை கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.  இதனை அடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சிறுமி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், அருகில் இருப்பவர்களிடம் விசாரித்து, தேடியும் பார்த்துள்ளனர். சிறுது நேரம் வீட்டில் இருக்கும் கட்டிலுக்கு அடியில் சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. 


இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அருகில் கடையின் உரிமையாளர் சிறுமியை மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் அழைத்து சென்றதை பார்த்ததாக தெரிவித்தார். இதனை அடுத்து, போலீசார் அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை வலைவீசி போலீசார் தேடி வருகின்றனர். ஒடிசாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க


Crime: லைவ் நிகழ்ச்சியில் ஷாக்! துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட தொகுப்பாளர்...என்ன நடந்தது?


kamal haasan birthday: ”கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி"...கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து