கடலூர் மாவட்டம் கோண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பாரத்முருகன் என்பவரின் மகன் பிரின்ஸ் (20).  சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் 21ஆம் தேதியன்று கடலூரில் இருந்து சென்னையில் உள்ள தனது தங்கையை பார்க்க காரில் புறப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த அனுமந்தை சுங்கச்சாவடி அருகில் சென்ற போது மற்றொரு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், பிரின்சின் காரை திடீரென வழி மறித்தனர். பின்னர் அவர்கள் 5 பேரில் 3 பேர் கீழே இறங்கி பிரின்சை மிரட்டி அவரது காருடன் கடத்தி சென்றனர். அடுத்த சில நிமிடத்தில் மற்றொரு காரும், அந்த காரை பின்னோக்கிச் சென்றது. மரக்காணம் தீர்த்தவாரி சாலை பகுதியில் சென்ற போது அந்த கும்பல் காரை நிறுத்தினர்.


32 ஆண்டுகளுக்கு முன்... தனது முதல் நேர்காணலில் சச்சின் என்ன சொன்னார் தெரியுமா?



வேலைக்காரப் பெண்ணுடன் ஓட்டம் பிடித்த கணவர்... போலீசில் புகார் செய்த மனைவிக்கு கொலை மிரட்டல்...!


பின்னர் பிரின்சை மிரட்டி அவர் வைத்திருந்த  11 ஆயிரத்து 500 ரொக்கத்தை பறித்தனர். அடுத்த சில நிமிடத்தில் அவர்கள் 5 பேரும் தாங்கள் வந்த காரில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து பிரின்ஸ், மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அனுமந்தை சுங்கச்சாவடியில் இருந்த சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை கைப்பற்றி அந்த காரின் பதிவெண் மூலம் விசாரணை நடத்தினர்.




விசாரணையில் மரக்காணத்தை சேர்ந்த ஷேக்பாபு மகன் ஷேக்சவுபர்சாதிக் (22), கோவிந்தன் மகன் அஜித்குமார் (26), சேகர் மகன் அஜித்குமார் (22), ராமு மகன் பாலமுருகன் (25), செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா தேன்பாக்கத்தை சேர்ந்த புண்ணியகோடி மகன் வினோத் (26) ஆகிய 5 பேரும் சேர்ந்து பிரின்சை காரில் கடத்திச்சென்று மிரட்டி அவரிடமிருந்த பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது.  இதையடுத்து ஷேக்சவுபர்சாதிக் உள்ளிட்ட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷேக்சவுபர்சாதிக், கோ.அஜித்குமார், வினோத், சே.அஜித்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பாலமுருகனை தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண