Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (30.01.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 


மாதாந்திர மின் பராமரிப்பு பணி 


தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.


விஜய்க்காக களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா! ஜான் ஆரோக்கியசாமிக்கு அல்வா! ஜனநாயகனின் புது ஸ்கெட்ச்


மின்நிறுத்த நேரம் 


பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 


Maha Kumbh Mela Stampede: யோகிக்கு 3 முறை கால் செய்த மோடி.! மகா கும்பமேளாவில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.. உ.பி_ல் நடந்தது என்ன?


குத்தாலம் தாலுக்காவில் மின்நிறுத்தம் 


அந்த வகையில் மயிலாடுதுறை கோட்டத்திற்கு உட்பட்ட பாலையூர், மேக்கிரிமங்கலம், கடலங்குடி, குத்தாலம் ஆகிய துணை மின் நிலையங்களில் மின் வினியோகம் பெறும் மின்பாதையில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மாந்தை, நக்கம்பாடி, ஸ்ரீகண்டபுரம், திருமங்கலம், திருவாலங்காடு, கடலங்குடி, வானாதிராபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை, கோழிக்குத்தி, மாதிரி மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 30.01.2025 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குத்தாலம் உதவி செயற்பொறியாளர் அருள்செல்வன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


TNPSC Group 2 Hall Ticket: குரூப் 2 தேர்வர்களே..வந்தது முக்கிய அறிவிப்பு- மிஸ் பண்ணிடாதீங்க!


மாறுதலுக்கு உட்பட்டது 


மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.