தஞ்சாவூர்: நிலக்கடலையை விவசாயிகளிடம் இருந்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி பேசினர். தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தலைமை வகித்தார் . இதில் விவசாயிகள் பேசியதாவது: திருவோணம் சிவ விடுதி கடலை விவசாயி ராமசாமி: திருவோணம் பகுதி சிவ விடுதி வெட்டி விடுதி உட்பட சுற்றுப்பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்து வருகின்றனர். நெல் பயிருக்கு மாற்றாக நிலக்கடலை சாகுபடி மட்டுமே இப்பகுதியில் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் 37 கிலோ விதையை ஒரு 5 ஆயிரம் கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. ஆனால் விவசாயிகள் விளைவிக்கும் நிலக்கடலையை தனியார் வியாபாரிகள் 42 கிலோ நிலக்கடலை ரூ.2100 முதல் ரூ.2200 வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். ஏன் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். நெல்லுக்கு மாற்றாக இப்பகுதிகளில் முழுமையாக நிலக்கடலை விவசாயம் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. நெல்லுக்கு அரசே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்கிறது. அதேபோல் நிலக்கடலையும் அரசை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்து பேசினார்.
நிலக்கடலையை விவசாயிகளிடம் இருந்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - தஞ்சை விவசாயிகள் கோரிக்கை
என்.நாகராஜன் | 24 Feb 2024 06:50 PM (IST)
நெல்லுக்கு அரசே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்கிறது. அதேபோல் நிலக்கடலையும் அரசை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுக்க வேண்டும்.
விவசாயி
Published at: 24 Feb 2024 06:50 PM (IST)