அந்தமான் அல்லது கோவா சென்று கடல் வாழ் உயிரினங்களை நேரில் காணுங்கள். வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் இந்த அனுபவம் நினைவுகளை உருவாக்கும். உங்கள் உறவை வலுப்படுத்தும்.
உங்கள் பிஸியான நேரத்திலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி, உங்கள் தந்தையுடன் உணவுப் பயணத்தை மேற்கொள்ளுங்கள். புதிய நகரத்தின் தெருவில் இருக்கும் உணவு வகைகளை ருசியுங்கள். நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் புதிய கதவுகளைத் திறக்கும். அந்த தருணங்களை நினைத்து வாழ்நாள் முழுவதும் மகழ்ச்சியாக இருங்க
ஜெய் பூர் அல்லது லோனாவாலாவுக்குச் செல்லுங்கள். ஹாட் ஏர் பலூனில் சென்று, அங்கு சூரிய உதயத்தை கண்டு ரசியுங்கள். நீங்கள் ஒருபோதும் மறக்க முடியாத சாகசமாக இது இருக்கும்.
உங்கள் அப்பாவின் சொந்த ஊருக்குச் சென்று, அவருடைய குழந்தைப் பருவத்து கேளுங்கள். அவரின் பயணத்தை மீண்டும் கேட்டறியுங்கள். அவரின் பழைய நண்பர்களைச் சந்தியுங்கள், அவருடைய சொந்த ஊரின் அழகை ரசியுங்கள்.
வனவிலங்கு சரணாலயத்திற்கு செல்லுங்கள். புலிகள், யானைகள், பாம்புகள் மற்றும் பலவற்றை ஒன்றாகப் ஒரே இடத்தில் பார்த்து சிலிர்ப்பான அனுபவத்தைப் பெறுங்கள்.
தொண்டு நிறுவனத்திலோ அல்லது பள்ளிக்கு சென்று உதவி செய்யுங்கள். இந்த செயல்பாடு நன்றியுணர்வு மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற உதவும்.
பயணப் பெட்டிகளை எடுத்துக்கொண்டு ஒன்றாகப் புறப்படுங்கள். நீண்ட பயணங்கள், உள்ளூர் உணவுகள் மற்றும் மறக்க முடியாத பிணைப்பு நல்ல அனுபவத்தை தரும். இது உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் நல்ல அனுபவமாக இருக்கும்.
மீன் பிடிக்கச் சென்று ஒருவருக்கொருவர் பொறுமையைக் கற்றுக் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் சிரித்துக் கொண்டு, இயற்கையின் அமைதியை எந்தவித கவனச் சிதறலும் இல்லாமல் அனுபவியுங்கள்.
குளிர்ச்சியை உணருங்கள், சூரிய உதயங்களைப் பாருங்கள், சூடான தேநீர் அருந்துங்கள். ஒரு இமயமலைப் பயணம் அமைதியும், தந்தையின் வாழ்க்கைப் பாடங்களும் நிறைந்ததாக நமக்கு இருக்கும்.