ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் - 1/2 மூடி, பெரிய தக்காளி - 2 ,பட்டை - 1, லவங்கம் -1 சேர்த்திடுக



சோம்பு-1/2 ஸ்பூன், இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 4 பல், முந்திரிப்பருப்பு - 4, பொட்டுக்கடலை - 1/2 ஸ்பூன்  சேர்த்திடுக



இவற்றை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்



ஒரு குக்கரில் 3 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்



இதில் சோம்பு – 1/2 ஸ்பூன், பிரியாணி இலை, கல்பாசி, அன்னாசிப்பூ, உள்ளிட்டவற்றை சேர்த்திடுக



கீறிய 2 பச்சை மிளகாய் கறிவேப்பிலை, நறுக்கிய 15 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்



அரைத்து வைத்துள்ள தேங்காய், தக்காளி விழுதை இதனுடன் சேர்க்க வேண்டும்



தேவையான அளவு தண்ணீர், தலா 1 ஸ்பூன் மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்திடுக



குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி கடைசியாக சிறிதளவு கொத்தமல்லித்தழை தூவவும்



சுவையான தக்காளி குருமா தயார். இதை இட்லி தோசை, சப்பாத்தி உடன் பறிமாறலாம்