தங்கு தடையின்றி இரவில் நிம்மதியாக தூங்க கீழே காணும் வழிமுறைகளை பின்பற்றலாம்.
நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், உணவுப் பழக்கங்கள், மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் தூக்கம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
பலருக்கும் தூக்கத்தின் நடுவே விழித்துக் கொள்ளும்போது பின்னர் தூக்கம் வராமல் அவதிப்படும் அபாயம் உள்ளது.
தூங்குவதற்கு ஒரு முறையான நேரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள். இரவில் குறிப்பிட்ட மணிக்கு படுக்கைக்கு செல்ல வேண்டும் என முடிவு எடுங்கள்.
தூங்குவதற்கு முன்பு பால் குடிப்பதால் உங்கள் உடலில் மெலடோனின் அளவு உயரும். இதனால், நிம்மதியாக தூங்கலாம்.
குளிப்பது சுறுசுறுப்பை உண்டாக்குவது போல, தூங்கச் செல்லும் முன்பு குளிப்பதால் நிம்மதியாக தூங்கலாம். புத்துணர்ச்சியுடன் தூங்கலாம்.
பலரது தூக்கம் கெடுவதற்கு முக்கிய காரணமாக செல்பாேன் மாறியுள்ளது. இதனால், இரவில் தூங்க சென்ற பின் படுக்கையில் செல்போனை பயன்படுத்தக் கூடாது.
நிம்மதியான தூக்கத்திற்கு சூழல் மிகவும் முக்கியம். படுக்கையறையில் எந்த சத்தமும் இல்லாத வகையில் அமைதியும், நல்ல காற்றோட்டமும் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
பலரது தூக்கத்திற்கும் இடையூறாக இருப்பது வெளிச்சம் ஆகும். இதனால், தூங்கச் செல்லும்போது விளக்குகளை அணைத்துவிட்டு தூங்குவது நல்லது ஆகும். இதனால், உடலில் மெலடோனின் உற்பத்தியை அதிகரித்து நிம்மதியான தூக்கம் தரும்.
நல்ல நிம்மதியான தூக்கம் மன அமைதியையும், புத்துணர்ச்சியையும் தரும்.