கோடையில் ரோஸ் வாட்டர் பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா?

Published by: ராஜேஷ். எஸ்

ரோஸ் வாட்டர் சருமத்திற்கு குளிர்ச்சியை அளிக்கிறது. கோடையில் வெப்பத்தால் ஏற்படும் எரிச்சலைத் தணித்து சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

தோல் ஈரப்பதத்தை அளிக்கிறது. சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்கிறது.

ரோஸ் வாட்டரை முகத்தில் தெளித்தால் உடனடியாக புத்துணர்ச்சியாக உணருவீர்கள்.

இயற்கையான டோனராக செயல்படுகிறது. துளைகளை சுருக்கி சருமத்தை இறுக்கமாக வைத்திருக்கும்.

எண்ணெயைக் கட்டுப்படுத்துகிறது. எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இது சிறந்த இயற்கை தீர்வு.

சன் பர்ன்லிருந்து நிவாரணம் அளிக்கிறது. சூரிய ஒளியினால் ஏற்படும் சிவந்த தன்மை எரிச்சலை குறைக்கிறது.

முகப்பருக்களை குறைக்க உதவுகிறது. பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பருக்களை குறைக்கும்.

தோல் பிரகாசிக்கும். தொடர்ந்து பயன்படுத்தினால் சருமத்தின் பளபளப்பு அதிகரிக்கும்.

கண்களின் சோர்வை குறைக்கிறது. பருத்தியால் கண்களில் தடவினால் கண் எரிச்சல் குறையும்.

புத்துணர்ச்சி அளிக்கிறது. ரோஜாக்களின் வாசனை மனதிற்கு அமைதியைத் தருகிறது.

கோடையில் பயன்படுத்தினால் சருமத்தை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கலாம்.