மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான முக்கிய காரணங்கள்? - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்

Published by: ராஜேஷ். எஸ்

உயர் இரத்த அழுத்தம் காரணமாக இரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

கெட்ட கொலஸ்ட்ரால் இரத்த நாளங்களில் படிந்து இரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இதனால் இதயத்திற்கு ஆபத்து அதிகரிக்கிறது.

சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு இதய சம்பந்தமான நோய்கள் வரும் அபாயம் அதிகரிக்கும்.

சிகரெட்டில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இரத்த நாளங்களைச் சுருக்கி இதயத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும்.

உடல் பருமன் இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.

உடல் உழைப்பு இல்லையென்றால் இரத்த ஓட்டம் சரியாக இருக்காது. இதயம் பலவீனமடையும் அபாயம் உள்ளது.

ஜங் ஃபுட், வறுத்த உணவுகள், அதிக உப்பு மற்றும் சர்க்கரை கொண்ட உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

மன அழுத்தம அதிகரித்தால் இரத்த அழுத்தம் உயர்ந்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

மது அருந்துவதை அதிகமாக உட்கொள்வதால் இதயத் துடிப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

சரியாக தூங்கவில்லை என்றால் உடலில் அழுத்தம் அதிகரித்து இதய சம்பந்தமான பிரச்சனைகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.