இரவில் படுத்த உடனே தூக்கம் வராமல் இங்கு பலரும் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர்.
ஒரு மனிதனின் மொத்த ஆரோக்கியமும் அவனது தூக்கத்தைப் பொறுத்தே அமையும்.
இன்று பலரது தூக்கத்தை சாப்பிடும் ஒரு விஷயமாக செல்போன் உள்ளது. செல்போனை இரவு நேரத்தில் நீண்ட நேரம் பார்ப்பதால் அவர்களின் தூக்கம் கெடுகிறது.
இரவில் தூங்குவதற்கு முன்பு குளிப்பது நல்லது ஆகும். அல்லது கை, கால்களை நன்றாக வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட்டு தூங்கச் செல்வது நல்லது ஆகும்.
இரவில் செரிமானத்தை பாதிக்கும் கடினமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது தூக்கத்தை கடுமையாக பாதிக்கும்.
இரவில் தூங்குவதற்கு முன்பு பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது நல்லது ஆகும்.
தூங்குவதற்கு முன்பு சில நிமிடங்கள் தியானம் செய்வது சிறப்பு ஆகும். அவ்வாறு செய்வதால் நிம்மதியாக தூங்கலாம்.
இரவில் தூங்குவதற்கு முன்பு நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும்.