வாய்விட்டு சிரிப்பதால் மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. இதனால், உடலின் ஆரோக்கியம் நன்றாக நீடிக்கும்.
வாய்விட்டு சிரிப்பதால் எண்டோர்பின்கள் வெளியாகிறது. இது உடலின் வலியை குறைப்பதுடன் மனதில் உள்ள கவலைகளை குறைக்கிறது.
வாய்விட்டு சிரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது. இதனால், தூக்கம் நன்றாக வருகிறது. தூக்கமின்மை பிரச்சினை சீராகிறது.
சிரிப்பதால் உடலின் ஆக்சிஜன் உட்கொள்ளல் அதிகரிக்கிறது. இது நுரையீரல், இதயத்தின் செயல்பாட்டை சீர்படுத்துகிறது.
சிரிப்பதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ரத்த அழுத்தமும் குறைகிறது. இதனால், இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.
வாய்விட்டு சிரிப்பதால் மனமும், உடலும் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாக இருப்பதால் நமது ஆயுள் அதிகரிக்கிறது.
மன அழுத்தத்தை குறைக்கம் சக்தி கொண்ட சிரப்பால் நமது மூளையின் ஆற்றலும் அதிகரிக்கிறது. இதனால், மூளையின் செயல்பாடும் சுறுசுறுப்பாகிறது. மன நிலையும் மேம்படுவதுடனும் நினைவாற்றலும் அதிகரிக்கிறது.
கவலையை மறைந்து சிரிப்பதால் உடலின் பதற்றம் குறைகிறது. இதனால், நாம் நிம்மதியாக இருக்க முடியும்.