வேப்பிங் பண்றீங்களா? - இ-சிகரெட் பிடிப்பதால் வரும் பயங்கர விளைவுகள்

Published by: ராஜேஷ். எஸ்

வேப்பிங் காரணமாக EVALI எனும் ஆபத்தான நுரையீரல் நோய் வரும் அபாயம் உள்ளது.

இருமல், சுவாசிப்பதில் சிரமம், நெஞ்சு வலி போன்ற பிரச்சனைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

நிகோடின் இதயத் துடிப்பை அதிகரித்து, இரத்த அழுத்தத்தை உயர்த்தி, மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.

வேப்பிங்கில் உள்ள நிகோடின் ஒரு வலுவான போதைப்பொருளை ஏற்படுத்துகிறது. ஒருமுறை பழக்கமாகிவிட்டால் அதை விடுவது கடினம்.

நிகோடின் மூளை வளர்ச்சியை பாதித்து நினைவாற்றல் மற்றும் கவனத்தை குறைக்கிறது.

பதட்டம், மனச்சோர்வு, எரிச்சல் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்.

சிறுநீரகங்கள் சேதமடைதல், தொண்டை வறட்சி, வாய் தொற்றுக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

உடல் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்து தொற்றுக்கள் விரைவில் ஏற்படும்.

நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சருமம் வறண்டு விரைவில் சுருக்கங்கள் ஏற்படும்.

இதய நோய் போன்ற நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

வேப்பிங் சிகரெட்டுக்கு “சேஃப் ஆல்டர்னேட்டிவ்” இல்லை. இரண்டும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை.