காலையில் எந்திரிக்கும்போது தலைவலியுடன் ஒரு நாளைத் தொடங்குவது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும்.
காலையில் எழுந்தவுடன் தலைவலி இருப்பதற்கு போதுமான தூக்கம் இல்லாமை மட்டும் காரணம் அல்ல. மன அமைதி ஆகியவற்றை பொறுத்தும் அமைகிறது.
பெரும்பாலும் இந்த தலைவலிக்கு முக்கிய காரணம் போதுமான தூக்கம் இன்மையே ஆகும். தொடர்ச்சியான போதுமான தூக்கம் இல்லாதது கடும் தலைவலியை ஏற்படுத்தும்.
தூக்கத்தில் நீங்கள் உங்களை அறியாமலே பற்களை கடித்தல். இதற்கு ப்ரூக்ஸிசம் என பெயர். இது முக மற்றும் தாடை தசைகளில் வலியை உண்டாக்கி தலைவலியை காலையில் உண்டாக்கும்.
தூக்கத்தின்போது மூச்சுத்திணறுவது மூளையில் ஆக்ஸிஜன் அளவை குறைக்கிறது. இதுவும் காலை தலைவலிக்கு ஒரு காரணம்.
தூக்க அட்டவணையை முறையாக பின்பற்ற வேண்டியது அவசியம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் உறங்குவது தலைவலியை உண்டாக்கும்.
காலை நேரத்தில் ரத்த அழுத்தம் உயர்வதும், குறைவதும் என சிக்கல் உள்ளவர்களுக்கு, பதட்டம் அதிகமாக உள்ளவர்களுக்கு எழுந்தவுடன் தலைவலி வரும்.