கூந்தல் ஆரோக்கியத்தில் கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் முக்கிய பங்காற்றுகிறது. கற்றாழைச் சாறு, தேங்காய் எண்ணெய் கலந்து முடியின் வேர்கால்கள் வரை தேய்த்து வர வேண்டும்.
முடி உதிர்வைத் தடுப்பதில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. வெந்தயத்தையும், தயிரையும் ஒன்றாக சேர்த்து தேய்த்தால் முடி வேர்க்கால்கள் வலுப்பெறும்.
கறிவேப்பிலை, தேங்காய் முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை இரண்டையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி நரைக்காது.
கற்றாழையுடன் பச்சைத் தேயிலையைச் சேர்த்து முடியில் தேய்த்து வந்தால் முடிக்கு ஆரோக்கியம் ஆகும்.
செம்பருத்தி முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தயிரும், செம்பருத்தி பூவும் கலந்து தேய்த்து வந்தால் இளநரை வராமல் தடுக்கும்.
அவகேடாவையும், ஆலிவ் எண்ணெய்யையும் ஒன்றாக சேர்த்து தலையில் தேய்த்து வரலாம். இதில் உள்ள வைட்டமின்கள் கூந்தல் ஆரோக்கியத்திற்கு பக்கபலம் ஆகும். அவகேடாவை சாப்பிட்டாலும் ஆரோக்கியம்.
சின்ன வெங்காயச் சாறு மற்றும் விளக்கெண்ணெய் முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.