கோவை செம்மொழி பூங்கா - திறப்பு விழா எப்போது?
கோவையில் 2010-ல் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்றது. அப்போது, கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.2021 ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலின் அறிப்பு வெளியிட்டு, செம்மொழி பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.
கோவை மாநகரின் நடுப்பகுதியில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த பூங்கா, பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகில் உருவாகி வருகிறது. செலவு சுமார் ரூ.170 கோடி என தகவல் தெரிவிக்கின்றன.2வது கட்டமாக 120 ஏக்கர் பரப்பளவில் விரிவுப்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஓய்வும் கற்றல் அனுபவமும் இணைந்து இந்த பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 16 வகையான தோட்டங்கள் மற்றும் 3 வகையான வனங்கள் முக்கிய அம்சங்களாக உள்ளன.
இயற்கை அருங்காட்சியகம், 1000 பேர் அமரும்வகையில் மாநாட்டு மையம், சிறுவர் விளையாடும் பொழுது போக்கு மையம், திறந்த வெளிஅரங்கு, இயற்கை உணவகம், நர்சரி தோட்டம், வாகனநிறுத்தம் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலான பூங்காவுக்குள் நடைபாதைகள், உடற்பயிற்சி கூடங்கள், விழா மண்டபங்கள், வெளிநாடுகளின் தோட்ட மாதிரிகள், சிறுவர் விளையாட்டு பகுதி, விசிட்டர்கள் சென்டர், குளிரூட்டிய அரங்குகள், உணவகம், மற்றும் வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல வசதிகள் இருக்கும்.
குறிஞ்சி வனம் – தமிழ் இலக்கியத்தில் சிறப்பானது,செம்மொழி வனம் – செம்மொழித் தமிழின் அடையாளம்/ மர வனம்
ஒரு சுற்றுலா மையமாக மட்டுமல்லாமல், தமிழ் மொழியின் அடையாளமாகவும், பசுமையின் புதுமுகமாகவும் மாறப் போகிறது என்று சொல்லப்படுகிறது.
2025 ஜூன் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.
தமிழின் செம்மொழிப் பெருமையை பிரதிபலிக்கும் விதமாகவும், இயற்கையோடு மனிதன் மீண்டும் இணைவதற்கான ஒரு தளமாகவும் இப்பூங்கா உருவாகி வருவதால், கோவையின் புது அடையாளமாக மாறும் என்று கூறப்படுகிறது.