Thiruvarur issue : கூலி தொழிலாளியை அரிவாளால் வெட்டிய அதிமுக பிரமுகர் - திருவாரூரில் பரபரப்பு சம்பவம்
ABP NADU
Updated at:
16 Jul 2021 06:59 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதிருவாரூரில் மீன்பிடித்தலில் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளியை வெட்டிய அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர். திருவாரூர் அருகே புதுப்பத்தூர் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. ஆண்டுதோறும் இந்த குளத்தில் அந்த கிராம மக்கள் மீன் பிடித்து விற்பனை செய்து அதில் வரும் பணத்தினை கிராமத்தின் பொதுவான செலவிற்கு பயன்படுத்துவதாக அந்த ஊர் மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர் நடராஜன் குளத்தினை தனது ஆக்கிரமிப்பில் வைத்துக் கொண்டதாகவும், வேறு யாரும் குளத்தில் மீன் பிடிக்க அனுமதி கிடையாது எனவும் தெரிவித்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.