பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து விடுமுறை விடப்படும் அதனால் வெளியூர்களில் பணிபுரிந்து வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு வருகை புரியும் நிலையில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உற்சாகமாக சுற்றுலா செல்ல திட்டமிடுவது வழக்கம்தான். அந்த வகையில் இந்த பொங்கல் விடுமுறைக்கு நீங்கள் சுற்றி பார்க்க சூப்பர் டூரிஸ்ட் பிளேஸ் தான் இது. டூர் போகவேண்டுமென்றாலே நமது நினைவிற்கு வருவது கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்றவைகள் தான் ஆனால் இந்த இடங்கள் எல்லாம் நாம் பார்த்தது தான். நாம் இருக்கும் இடங்களுக்கு அருகே நம்ம ஊர் பகுதிகளிலேயே பல்வேறு இடங்கள் நாம் பார்ப்பதற்கு உண்டு .
அதில் ஒன்று தேனி மாவட்டத்தில் கூடலூர் அருகே உள்ள 18ம் கால்வாய் தொட்டி பாலம். இங்கு வந்தால் மன அமைதி பெற முடியும். தேனி மாவட்டத்திற்கு வந்தால் முதலில் நாம் செல்ல நினைப்பது மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உருவெடுக்கும் சுருளி அருவி. இந்த விடுமுறையில் நீங்கள் சுருளி அருவிக்கு போக பிளான் பண்றீங்களா அப்போ இந்த இடத்திற்கும் போயிட்டு வாங்க கம்பம் வழியாக குமுளிக்கு மலையேறும் முன்பு இந்த இயற்கை எழில் சூழ்ந்த இடத்தை பார்க்க முடியும். தேனி மாவட்டம் குமுளி செல்லும் சாலையில் லோயர்கேம்ப் செல்லும் முன்பே சுமார் 2 கிலோ மீட்டருக்கு முன்பே ஒரு ஐயப்பன் கோவில் உள்ளது. அதிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் பயணித்தால் இந்த இடத்தை அடையலாம். இதற்கு நாம் சொந்த வாகனத்தில் செல்வது சிறந்தது.
தேனி மாவட்டம் தம்மணப்பட்டி அருகே உள்ள 18 ம் கால்வாய் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுமார் 40 அடி உயரத்தில் உள்ள தொட்டி பாலத்தில் தண்ணீர் கடந்து செல்கின்றது. இதனை பார்த்தாலே நமக்கு உற்சாகமும், மன அமைதியும் கிடைக்கின்றது. அதனால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வர தொடங்கியுள்ளனர். தென்னை தோப்புகள் நம்பளை வரவேற்க, மலை அடிவாரத்தை ஒட்டி அடிவாரத்தில் இந்த பாலம் அமைந்துள்ளதால். ரம்மியமாக இருக்கும் இந்த தொட்டி பாலத்தில் குடும்பத்தினருடன் நண்பர்களுடனும் குளியல் போடலாம்.
இயற்கையான காற்று, சுற்றிலும் மலைகள் பறவைகளின் சத்தத்தில் குளியல் போடலம் என்றால் யாரு தான் விரும்ப மாட்டாங்க, இந்த லீவை உற்சாகத்துடன் கொண்டாட இந்த இடம் தான் சரியானது. உங்களுக்கு நீச்சல் மட்டும் தெரிந்திருந்தால் 18 ம் கால்வாய் சொர்க்கம் எனவே கூறலாம். ஆனால் இந்த தொட்டியில் கெமிக்கல் நிறைந்த சோப்பு போன்றவற்றை பயன்படுத்த அனுமதி இல்லை. பெண்கள் மற்றும் நீச்சல் தெரியாதவர்கள் என அனைவருமே இந்த தொட்டியின் ஓரத்தில் குளிக்க முடியும் அதனால் கவலை வேண்டாம் குடும்பத்தினுடன் இந்த பொங்கல் விடுமுறையில் ஒரு விசிட் போடுங்க.