தஞ்சாவூர்: சுற்றுலா போகணுமா... அப்போ வாங்க தஞ்சாவூருக்கு... பக்தியும் இருக்கும், பொழுதும் போகும் என்று அனைத்தும் நிரம்பிய சுற்றுலாத்தலம்தான் தஞ்சாவூர். தஞ்சை என்றால் "குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி" என்றும் பொருள்படும். அதற்காக நெற்களஞ்சியம் மட்டும்தான் என்று நினைத்து விடாதீர்கள். இன்னும் இருக்கு... சொல்ல... சொல்ல நிறைய இருக்கு. கட்டிடம், கலை, கதை, கவி என்று தஞ்சையின் மண், கல் கவிப்பாடும். நெல் வயலை தொட்டு வரும் காற்றும் இசைப்பாடும். எத்தனை பெருமை, சுற்றிப்பார்க்க எத்தனை இடம் என்று மனம் ரம்யமாகும். மண்ணுக்கே வாசனை கொடுக்கும் ஊர். மணம் மண்ணுக்கு மட்டுமில்லை இங்கு வரும் அனைவருக்கும்தான். சுற்றுலாப்பயணிகளுக்கு தெரிந்த பெரிய கோயில், அரண்மனை, சிவகங்கை பூங்கா, மணிமண்டபத்திற்கு அடுத்தப்படியாக மனதை அள்ளும் தென்னக பண்பாட்டு மையம் மிக முக்கியமான இடமாகும். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அமைத்தது. 25 ஏக்கர் பரப்பளவில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, அந்தமான், லட்சத் தீவு ஆகியவற்றின் தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Thanjavur: வாங்க... வாங்க... தென்னக பண்பாட்டு மையத்திற்கு வாங்க!!!
என்.நாகராஜன் | 03 Mar 2023 02:32 PM (IST)
Thanjavur South Zone Cultural Centre: இங்கு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் கலைகளை கொண்ட நுழைவாயில் கதவுகள் பிரமிக்க வைக்கிறது.
தென்னக பண்பாட்டு மையம்
Published at: 03 Mar 2023 02:32 PM (IST)