கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது கொரோனா. COVID 19 என அழைக்கப்படும் இந்த உயிர்கொல்லி வைரஸானது இன்று பல்வேறு பரிணாமங்களை அடைந்துள்ளது.இந்த வைரசால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் பெரும்பாலான நாடுகளில் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் இன்னும் அந்த மாதிப்பிலிருந்து மீளவில்லை என்றாலும் சமீப காலமாக கொரோனா தொற்றின் பரவல் சற்று ஓய்ந்திருந்தது. இந்நிலையில் , மீண்டும் 23 நாடுகளில் அதன் புதிய பரிணாமமான ஒமிக்ரான் என்னும் வேரியண்டின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்டுள்ள உருமாறிய வைரஸ்களான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா வைரஸ்களை விட இந்த புதிய உருமாறிய வைரஸ், அதிபயங்கரமானது, 50 முறை உருமாற்றம் கொண்டுள்ளது என மருத்துவ விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.ஓமைக்ரானின் தீவிரம் குறித்து இனி வரும் நாட்களில் நமக்கு தெரிய வரும் . இந்த நிலையில் பென்சில்வேனியா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் சுவிங்கம் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என கூறி சில ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 50 மில்லிகிராம் சுவிங்கத்தின் மூலம் 95% கொரோனா பரவலை தடுக்க முடியும் என்பதுதான் ஆராய்ச்சியார்களின் கருத்து. சுவிங்கம் இன்னும் ஆரம்ப-நிலை ஆராய்ச்சியில்தான் உள்ளது . இதனை மனிதர்களிடம் இன்னும் சோதிக்கவில்லை. மெல்லும் வகையில் உருவாக்கபப்ட்ட இயந்திரத்தின் உதவி கொண்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. தற்போது இது அடுத்தடுத்த சோதனைக்கு தயாராகி வருகிறது. இவ்வகை சுவிங்கம் பயன்பாட்டிற்கு வந்தால் , அது தடுப்பூசி தட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி கிடைக்கப்பெறதா நாடுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதுதான் பென்சில்வேனியா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கும் கருத்து.