நாம் தினமும் பயணம் செய்யும் சாலையில் எப்போதும் ஒரு மஞ்சள் நிற சிப் போன்ற ஒன்று எப்போதும் பொறிக்கப்பட்டிருக்கும். நம்மில் பலரும் அதை கவனித்திருப்போம். ஆனால் அது எதற்காக சாலையின் மீது பொறிக்கப்பட்டுள்ளது என்று எண்ணியிருப்போமா? அதன் பயன் என்ன? அது எப்படி வேலை செய்யும்? 


பெரும்பாலான சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சாலைகள் ரோடு ரிஃப்லெக்டர். இந்த ரிஃப்லெக்டர் எல்.இ.டி விளக்குகள் உடன் செயல்படுகின்றன. மேலும் இவை போட்டோ சென்சார்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. 


இவற்றின் செயல்பாடு எப்படி?


ரோடு ரிஃப்லெக்டரிலுள்ள எல்.இ.டி விளக்குகள் பகலில் ஒளிராது. ஏனென்றால் பகலில் சூரிய ஒளி படும் போது அதில் இருக்கும் போட்டோ சென்சர்கள்  மீது ஒளி படும் பட்சத்தில் அந்த எல்.இ.டி விளக்குகள் எரியாது. அதேசமயம் இரவு நேரத்தில் அந்த போட்டோ சென்சார்கள் மீது சூரிய ஒளி படாத காரணத்தால் எல்.இ.டி லைட் ஒளிரும். இதனால் சாலையில் அந்த விளக்குகள் எரியும். 




மேலும் படிக்க: கம்யூட்டரில் இருந்து போலீஸைக் கூப்பிடலாம்.. ஸ்கைப் கொடுத்த சூப்பர் அப்டேட்..!




இவற்றின் பயன் என்ன?


இரவு நேரங்களில் சாலையில் உள்ள மேடு பள்ளங்களை தெரிந்து கொள்ள இதுவும் சிறிய வகையில் உதவி செய்யும். அதேபோல் இருவழி சாலையில் இரண்டு வழிகளுக்கு இடையேயான கோடு இரவு நேரத்தில் நன்றாக தெரியவும் இது பயன்படும். 


இந்த சாலை ரிஃப்லெக்டர் மிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. ஆகவே தான் இது நெடுஞ்சாலைகள் மட்டுமல்லாமல் அனைத்து வகை சாலைகளிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 


போட்டோ சென்சார் என்றால் என்ன?


போட்டோ சென்சார் என்பது சூரிய ஒளியை கொண்டு இயங்கும் சாதனமாகும். இதில் சூரிய ஒளி பட்டால் அது அதை பயன்படுத்தி கொள்ளும். சூரிய ஒளி சார்ந்த பயன்பாட்டிற்கு இது அதிகமாக பயன்படுத்தப்படும். குறிப்பாக சூரிய எரிசக்தியில் இயங்கும் சாதனங்களில் இது அதிகமாக காணப்படும். இயல்பாக இருக்கும் சென்சார்களைவிட இது மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் சாதனமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண