Redmi, Stylus ஐ ஆதரிக்கும் புதிய ரைட்டிங் பேடை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் குழந்தைகள் ஒரு காலத்தில் சிலேட்டும், குச்சியும் கொண்டு சென்றார்கள் . அதன் பின்னர் காகித நோட்டுகள் மட்டுமே போதும் என்றானது. ஆனால் தற்போதையை ஸ்மார்ட் உலகில் கரும்பலகைகள் ஸ்மார்ட்போடாக மாறிவிட , அதற்கு ஏற்றார் போல் குழந்தைகள் எழுதி பழகவும் புதிய ரைட்டிங் பேட் அறிமுகமாக தொடங்கிவிட்டது. ஏற்கனவே சந்தையில் நிறைய குழந்தைகளுக்கான ரைட்டிங் பேட் இருக்கும் நிலையில் , ரெட்மி நிறுவனம் 90 கிராம் எடை மற்றும் 8.5 அங்குல திரை அளவு கொண்ட புதிய ரைட்டிங் பேடை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ரெட்மி ரைட்டிங் பேடிற்கு 3 வகை பேனாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எழுதுவதற்கும் , வரைவதற்கும் குழந்தைகள் பேனாக்களை மாற்றி பயன்படுத்தலாம். மேலும் இந்த வகை ரைட்டிங் பேடினை ரெட்மி 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிந்துரைக்கிறது. குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதனை பயன்படுத்தலாம் , அதாவது வீட்டில் அடுத்து செய்ய வேண்டிய வேலையை குறித்துக்கொள்ளவும் , டூடுல்களை உருவாக்கவும் , குறிப்பெடுத்துக்கொள்ளவும் பயன்படுத்தலாம்.
ரெட்மியின் புதிய ரைட்டிங் பேட் ஆனது பட்டன் பேட்டரி CR2016 உடன் வருகிறது. இது மாற்றியமைக்கக்கூடிய வகையில் இருக்கும் . இந்த புதிய ரைட்டிங் பேட் தற்போது 599 ரூபாய்க்கு ரெட்மி அதிகாரப்பூர்வ தளங்களில் கிடைக்கிறது. இதனை ஆடர் செய்பவர்களுக்கு ஒரு ரைட்டிங் பேட் , ஒரு பேனா அதனுடன் விளக்க உரை அடங்கிய ஒரு மேனுவலும் கிடைக்கிறது.