பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் வேறு பெயருடன் களம் இறங்கியது பப்ஜி. கடந்த மாதம் பப்ஜியின் இந்திய பதிப்பின் பெயரை "BATTLE GROUND INDIA” என அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. புதிய பெயருடன் முன்பதிவை தொடங்கிய Battlegrounds Mobile India கூகுள் ப்ளே ஸ்டோரில் களம் இறங்கியது. ஒருமாதமாக ரிலீஸ் தேதி எப்போது என அறிவிக்கப்படாத நிலையில் புதிய அறிவிப்புகள், பரிசுகள், டீசர்கள் என களைகட்டியது சோஷியல் மீடியா.
தொடங்கி சில வாரங்களுக்கு மேலாக பீட்டா வெர்சன் வெளியான சூழலில் முழு கேம் ஜூலை 2-இல் ப்ளே ஸ்டோரில் ரிலீஸ் ஆனது. தென்கொரியாவை சேர்ந்த கிராஃப்டர் என்பவர் வடிவமைத்த இந்த கேம் இந்தியாவில் அதிகம் ட்ரெண்டாகும் கேமாக இடம்பிடித்துள்ளது. அத்துடன் வெளியே வந்த ஒரு நாளிலேயே பலர் இதை பதிவிறக்கம் செய்தனர். இந்நிலையில் எங்களுக்கு எப்போது பேட்டில்கிரவுண்ட் என ஐஓஎஸ் பயனாளர்கள் ஆர்வத்துடன் கேள்வியெழுப்பி வருகின்றனர். ஏனென்றால் இப்போது ஆண்ட்ராய்டில் மட்டுமே பேட்டில்கிரவுண்ட் வந்துள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள அந்நிறுவனம், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள். உங்களுக்கான அப்டேட் வரும் என்றும் விளக்கம் அளித்துள்ளது
ஆண்ட்ராய்டு பயனர்கள் தற்போது பேட்டில்கிரவுண்டில் ஆர்வமுடன் விளையாடி வரும் நிலையில் ஐஓஎஸ் பயனர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். வெளியான தகவலின்படி , இந்த மாதம் 24ம் தேதி ஐஓஎஸ்க்கான பேட்டில்கிரவுண்ட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
AMAZON PRIME DAY | ஆஃபர் மழையில் நனைய தயாரா! - இளைஞர்களை குறிவைக்கும் அமேசான் ப்ரைம் டே.. !
செயலிகள் மூலமாக இந்தியாவை சீனா உளவு பார்ப்பதாக கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட சீனாவுடன் தொடர்புடைய செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதில் முக்கியமானது பப்ஜி. பல்வேறு விமர்சனங்களுக்கு நடுவே கொடிகட்டிப்பறந்த பப்ஜி ஒரே நாளின் காணாமல் போனது.
அதன்பின் பப்ஜியின் இடத்தைப் பிடிக்க பல கேம்கள் போட்டிப்போட்டன. CALL OF DUTY, FAUG-G என நிறைய மொபைல் கேம் வந்தது. ஆனால் பயனில்லை . இந்திய இளசுகளிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்த பப்ஜியின் இடத்தை வேறு கேம்களால் நிரப்பவே முடியவில்லை. இந்நிலையில்தான் மீண்டும் பேட்டில்கிரவுண்ட் என்ற பெயரில் பப்ஜியின் மறு வெர்ஷன் களம் இறங்கியது.
ஐஓஎஸ் பேட்டில்கிரவுண்ட் இந்தியாவுக்கான பிரத்யேக தயாரிப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பயனர்களையும், இந்திய சந்தையையும் கருத்தில் கொண்டு முழுக்க முழுக்க இந்தியாவை மனதில் வைத்தே உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செல்போன் தொலைந்து போனால் வங்கி கணக்கு மற்றும் யுபிஐ விவரங்களை பாதுகாப்பது எப்படி?