அயர்லாந்து தரவு தனியுரிமை ஒழுங்குமுறை அமைப்பு, தனியுரிமை மீறலில் ஈடுபட்டதாக சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு 277 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்துள்ளது.


ஆன்லைனில் கிடைக்கப்பெற்ற ஃபேஸ்புக்கின் தனிப்பட்ட தரவுகளின் தொகுக்கப்பட்ட தரவுத்தொகுப்பைக் கண்டுபிடித்தது தொடர்பாக ஏப்ரல் 2021 இல் தொடங்கப்பட்ட விசாரணையின் விளைவாக அபராதம் விதிக்கப்பட்டது. ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் பல திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.


அயர்லாந்தின் டேட்டா பிரைவசி கமிஷனர் (டிபிசி) மெட்டா நிறுவனங்களில் ஒன்றிற்கு எதிராக நான்காவது முறையாக அபராதம் விதித்துள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மெட்டாவின் தனியுரிமைக் கட்டுப்பாட்டாளர் ஆகும். மேலும் சமூக ஊடகக் குழுவில் இன்னும் 13 விசாரணைகள் நிலுவையில் உள்ளன.
செப்டம்பரில் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு 405 மில்லியன் யூரோக்கள் அபராதமாக விதிக்கப்பட்டது.
ஆப்பிள், கூகுள், டிக்டாக் மற்றும் பிற டெக்னாலஜி நிறுவனங்களையும் டேட்டா பிரைவசி கமிஷனர் ஒழுங்குப்படுத்துகிறார்.


முன்னதாக, கூகுள் நிறுவனத்திற்கு இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (competition commission of india) 1337.76 கோடி ரூபாய் அபராதம் விதித்த நிலையில்  அந்த தீர்ப்பை எதிர்த்து சட்டப்பூர்வ சவால்களை சந்திக்கவுள்ளது.


ஸ்மாட்ஃபோன்களுக்கு ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றழைக்கப்படும் இயங்குதளம் மிகவும் அவசியமானது. அந்தவகையில், ஆண்ட்ராய் என்ற ஓ.எஸ்.-ஐ கடந்த 2005-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் வாங்கியது. அதிலிருந்து ஸ்மாட்ஃபோன்கள் நிறுவனங்களுடன் கூகுள் ஒப்பந்தங்களை மேற்கொள்ள தொடங்கியது. 


அதாவது ஸ்மாட்ஃபோன் உற்பத்தி நிறுவனங்கள் தங்களுக்கான ஓ.எஸ். பயன்பாட்டிற்கு ஆண்ட்ராய்ட் உடன் ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்த நடைமுறைகளில் கூகுள் நிறுவனம் போட்டியாளர்களுக்கான விதிமுறைகளை மீறியுள்ளாதாக கூறப்பட்டுள்ளது.


SMART TV: ரூ.13,000 பட்ஜெட்டில் 43-இன்ச் infinix ஸ்மார்ட் டிவி.. எங்கு ஆர்டர் செய்யலாம்?


இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மாதம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வீடியோ வெளியீடு சேவைகள், இணைய உலாவுதல், இணைய தேடுதல், ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றுக்காக ஆன்ட்ராய்டு இயங்கு முறைக்கான லைசென்ஸ் முறையில் கூகுள் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறியுள்ளது. உலகம் முழுவதும் கூகுள் அதிக நம்பிக்கையற்ற ஆய்வை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த தீர்ப்புகள் வந்துள்ளன. கடந்த மாதம், ஒரு ஐரோப்பிய நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டின் தீர்ப்பை உறுதிசெய்தபோது, ​​நிறுவனம் "ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்களின் உற்பத்தியாளர்கள் மீது சட்டவிரோதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது “ என உறுதிப்படுத்தியதை அடுத்து கூகுள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. அங்குள்ள நீதிமன்றத்தால் கிட்டத்தட்ட ரூ. 33,800 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.


கூகுள் வரைமுறைகளை மீறியதாக இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்:


ஸ்மாட்ஃபோன்களுக்கு ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றழைக்கப்படும் இயங்குதளம் மிகவும் அவசியமானது. அந்தவகையில், ஆண்ட்ராய் என்ற ஓ.எஸ்.-ஐ கடந்த 2005-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் வாங்கியது. அதிலிருந்து ஸ்மாட்ஃபோன்கள் நிறுவனங்களுடன் கூகுள் ஒப்பந்தங்களை மேற்கொள்ள தொடங்கியது. அதாவது ஸ்மாட்ஃபோன் உற்பத்தி நிறுவனங்கள் தங்களுக்கான ஓ.எஸ். பயன்பாட்டிற்கு ஆண்ட்ராய்ட் உடன் ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்த நடைமுறைகளில் கூகுள் நிறுவனம் போட்டியாளர்களுக்கான விதிமுறைகளை மீறியுள்ளாதாக கூறப்பட்டுள்ளது.மேலும், இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து சந்தைகளை கணக்கில் கொண்டு அதனடிப்படையில் கூகுள் நிறுவனம் சந்தையில் ஆளுமை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.