ஐபோன் மற்றும் ஐபேட் வைத்திருக்கும் பயனாளர்கள் தங்களது சாதனங்களின் இயங்குதளத்தை புதுப்பிக்க வேண்டும் என CERT -in (CERT-Indian Computer Emergency Response Team) இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழுஅவசரகால உத்தரவை பிறப்பித்துள்ளது. ஐபோன் மற்றும் ஐபேடின் முந்தைய புதிப்பிப்புகளில் உள்ள சில பாதுகாப்பு பிரச்சனை காரணமாக இந்த அறிவிப்பு வெளியானதாக தெரிகிறது .  அரசுக்கு சொந்தமான CERT -in குழு, ஐபோன் மற்றும் ஐபேடின் முந்த அப்டேட்டில்   நினைவக திறன்  பாதிப்பு அதாவது memory corruption vulnerability என்ற ஒன்று இருப்பதை கண்டறிந்துள்ளது. இதன் மூலம் ரிமோட் அட்டாக்கர்ஸ் ஐபோன் மற்றும் ஐபேடின் நினைவகத்திற்குள் நுழைந்து தகவல் திருட்டில் ஈடுபட வாய்ப்புள்ளதாக  CERT -in தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவல்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




தீவிரத்தை உணர்ந்த ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மற்றும் ஐபேட் பயனாளர்களுக்கான புதிய அப்டேட்டை  இந்த வார தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. அதன் படி தற்போது அறிமுகமாகியுள்ள iOS 14.7.1 மற்றும் iPadOS 14.7.1 ஆகிவற்றை பயனாளர்கள் உடனடியாக புதிப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பிழைத்திருந்தங்களுடன் அறிமுகமாகியுள்ள இந்த புதிய  அப்டேட்டானது நினைவக திறன் பாதிப்பிலிருந்து 
(memory corruption vulnerability) முழுமையான பாதுகாப்பை வழங்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்த அறிவிப்பு அனைத்து ஐபோன் பயனாளர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  ஐபோன் 6 மற்றும் அதற்கு பிறகான மொபைல் போன்கள் , ஐந்தாம் தலைமுறை மற்றும் அதற்கு பிறகு வெளியான சாதனங்கள், ஐபாட் புரோ மாடல்கள், ஐபாட் ஏர் 2 , ஐபோன் மினி , ஐபேட் டை ( 7வது தலைமுறை ) , மேக் பிக் சர் ( macOS Big Sur)போன்றவை  நினைவக திறன் பாதிப்பு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும்  அந்த ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.




ரிமோட் அட்டாக்கர்ஸால் தன்னிச்சையான குறியீட்டை (malicious code ) செயல்படுத்துவதற்கும், நினைவகத்தில் உள்ள தகவல்களை திருடுவதற்கும் இந்த பிரச்சனை ஏதுவாக இருக்கும் என  கூறப்படுகிறது.ஐபோன் மற்றும் ஐபேடில் போதுமான நினைவக திறன் இல்லாத பட்சத்தில் , IOMobileFrameBuffer பகுதியில் இந்த பாதிப்பு ஏற்படுவதாக CERT -in  தெரிவித்துள்ளது. Kernel privileges ( கணினி மற்றும் மொபைலின் அனைத்து வன்பொருள் மற்றும் நினைவகத்திற்கும் குறியீட்டை நேரடியாக அணுக அனுமதிக்கும் செயலாக்க முறை) மூலம் ரிமோட் அட்டாக்கர்ஸ் தேவையான பாதிப்பை ஏற்படுத்தவும் இது வழிவகை செய்கிறது. இதிலிருந்து ஐபோன் மற்றும் ஐபேட் பயனாளர்கள் தப்பிக்க ஒரே வழி , சமீபத்திய iOS 14.7.1 மற்றும் iPadOS 14.7.1 அப்டேட் செய்வதுதான். உங்கள் மொபைல் மற்றும் ஐபேடில் Settings > General > Software Update என்ற வசதியின் மூலம் இந்த  14.7.1 இயங்குதள பதிப்பினை புதிப்பித்துக்கொள்ளலாம்.