ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனம் அமேசான். இந்தியா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில், பொருட்களை வாங்க விரும்புபவர்களின் நம்பர் ஒன் சாய்ஸ் இதுதான். அமேசான் போன்ற இணையழி வர்த்தக நிறுவனங்களாக அதில் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் முதலீட்டை அடிப்படையாக கொண்டு செயல்படக்கூடியது. இந்த தளங்களில் பொருட்களை வாங்கவிரும்பும் வாடிக்கையாளர்கள் அதிக ரேட்டிங் மற்றும் பொருட்கள் மீதான நல்ல கருத்துகள் இருக்கிறதா என்பதை அடிப்படையாக வைத்துத்தான் அதன் மீது தங்கள் ஆர்வத்தினை செலுத்துவர். எனவேதான் அமேசான் விற்பனையாளர்கள் பலர் ரேட்டிங் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். சைனாவை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் இந்த அதிர்ச்சி சம்பவம் அம்பலமாகியுள்ளது. கிட்டத்தட்ட 2 லட்சம் வாடிக்கையாளர்கள் போலி ரேட்டிங் அடிப்படையில் பொருட்களை வாங்கி, ஏமாந்திருப்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.
எப்படி செயல்படுகிறது இந்த போலி ரேட்டிங் விற்பனை? முதலில் அமேசானில் பொருளை விற்கும் நபர், அதிக ரேட்டிங் வேண்டிய பொருள் குறித்த விவரங்களை குறிப்பிட்ட நபர்களுக்கு வழங்குகிறார். அவர்கள்தான் போலி ரிவியூவர்ஸ். பொருட்களின் விவரங்களை பெற்றுக்கொண்ட அவர்கள், தங்கள் அமேசான் கணக்குகளில் இருந்து அந்த பொருளை ஆர்டர் செய்கின்றனர். ஆர்டர் செய்த பொருள் வந்தவுடன், அதனை பணம் கொடுத்து பெற்றுக்கொள்கின்றனர். பின்னர் அமேசான் வலைதளத்திற்கு சென்று தாங்கள் வாங்கிய பொருட்களுக்கு கீழே , பெற்றுக்கொண்ட பொருளின் புகைப்படங்களை பதிவேற்றி, அதற்கான அதிகபட்ச ரேட்டிங் மதிப்பான, ஐந்து புள்ளிகளை வழங்குகின்றனர். பிறகு பொருள் பற்றிய சிறப்பான கருத்துகளை பதிவிட்டு அந்த லிங்க் மற்றும் தங்களின் வங்கிக்கணக்கு விவரங்களை விற்பனையாளருக்கு அனுப்பி வைக்கின்றனர்.